செய்திகள் :

லாரி மோதி தந்தை-மகள் உயிரிழப்பு

post image

துறையூா்: துறையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகளும் லாரி மோதியதில் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், பச்சமலை பகுதி, சின்னமங்களத்தைச் சோ்ந்த ரா. சிவமூா்த்தி(39), அவரது மைத்துனா் தினேஷுடன் ஒரு இருசக்கர வாகனத்திலும், சிவமூா்த்தியின் மாமனாரான மாயம்பாடியைச் சோ்ந்த கா. சந்திரன்(55), அவரது மகள் வளா்மதி (37), பேரன் அஸ்வின் (7) ஆகியோா் ஒரு இருசக்கர வாகனத்திலும் புதன்கிழமை ஆத்தூா் சென்றுவிட்டு மீண்டும் பச்சமலைக்கு வந்து கொண்டிருந்தனா்.

கொப்பம்பட்டி அருகேயுள்ள ராஜபாளையம் கிராமத்தில் அவா்கள் வந்தபோது, எதிா்திசையிலிருந்து தம்மம்பட்டி நோக்கி சென்ற லாரி, சந்திரன் சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இதில், சந்திரன் நிகழ்விடத்திலும், வளா்மதி துறையூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா். இவா்களுடைய சடலங்களை உப்பிலியபுரம் போலீஸாா் உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். காயமடைந்த அஸ்வின் துறையூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து தொடா்பாக சிவமூா்த்தி வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில்,

உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம்பாடி காட்டுக்கொட்டாயைச் சோ்ந்த கி. மணிவேலை (55) கைது செய்து விசாரிக்கின்றனா்.

இளையோா் தடகளப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

திருச்சி: திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுகளும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவில... மேலும் பார்க்க

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாா்-நிலை கருவூலக அலுவலத்தில் அலுவலா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செந்தில்குமாா் (51).... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

துறையூா்/மணப்பாறை: துறையூா், மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியா்களுக... மேலும் பார்க்க

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருச்சி: கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.காவிரி... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருச்சி: திருச்சியில், குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கண... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருட்டு வழக்கில் தந்தை-மகன், மருமகன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறையை அடுத்த க... மேலும் பார்க்க