செய்திகள் :

தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்டெக்ட் சேர்மேன்

post image

உலக தொழில் முனைவோர் தினத்தையொட்டி தேனி சின்னமனூரில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் தொழில் முனைவோர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 10-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு தாங்கள் தயாரித்த இயற்கை முறையிலான உணவு பொருள்களை விற்பனை செய்தனர். இதை பார்வையிட்ட வருவாய் கோட்டாட்சியர் சில பொருள்களை வாங்கினார்.

உலக தொழில் முனைவோர் தின விழா

விழாவில் பேசிய சென்டெக்ட் வேளாண் மையத்தின் சேர்மேன் பச்சைமால் "தொழில் முனைவோர்கள் அதிகமாகியிருப்பதால் தான் இந்தியாவில் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிக்கிறது. வெளி நாடுகளில் இறக்குமதி செய்து கொண்டிருந்த பொருள்களை தற்போது இந்தியாவிலேயே தயாரித்து வருகிறோம். சென்டெக்ட் சார்பில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமத்தின் விவசாயிகளை இரண்டு மடங்கு லாபம் பெற செய்திருக்கிறோம்" என்றார்.

இதை தொடர்ந்து பேசிய உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது , " தொழில் முனைவோர்களை உருவாக்க என்ன உதவி வேண்டுமானலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். மாநில அரசின் திட்டங்களையும் மானியங்களையும் தகுதியான நபர்களுக்கு கொடுப்பதற்கான வேலைகளை செய்யலாம்" என்றார்.

மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநர் மோகன்ராஜ் பேசும் போது, "தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடனுதவி வழங்கபடுகிறது. மத்திய அரசு நிறைய கடனுதவிகள் மானியங்களுடன் கொடுக்கிறது.

உலக தொழில் முனைவோர் தின விழா

குறிப்பாக பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்கள் முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ் 10 இலட்சம் 35 சதவீத மானியத்துடன் கடன் கிடைக்கும். கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு அதிகபட்சம் 3 இலட்சம் வரை கடன் பெறலாம். இதில் 50 ஆயிரம் வரை மானியம் மற்றும் வட்டிக்கும் மானியம் தருகிறோம்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளும், தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டனர்.

மதுரையில் இருந்து அமெரிக்கா பறக்கும் பட்டுக்கிளி - கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் அசத்தும் இளைஞர்

மதுரை மீனாட்சி அம்மன் கையிலும், திருச்செந்தூர் முருகன் கையிலும் இருக்கும் கிளி பற்றிய புராணங்களை நாம் அறிந்திருப்போம், அந்த தெய்வங்களின் அலங்காரத்தில் இடம் பெறும் கிளியை, பட்டால் செய்யும் தொழிலில் ஈடு... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 37 : `உணவு கலப்படம் என்ற பெரும் சவால்.!’ - அமெரிக்க ரிட்டர்னின் `AMMA GENOMICS’ கதை

AMMA GENOMICS`StartUp' சாகசம் 37இந்தியாவில் உணவு என்பது வெறும் பசியாற்றும் பொருள் மட்டுமல்ல, அது நம் பாரம்பரியத்தின் மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளம். "உணவே மருந்து" என்ற நம் முன்னோர்களின் தத்துவம் இன்... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 36 : `பாரம்பரியத்தை 250+ ஐஸ்கிரீமாக மாற்றிய கதை’ - இந்த ஐஸ்கிரீம் ராணியை தெரியுமா?

Chill N Heal Ice creams`StartUp' சாகசம் 36 :இந்தியாவின் ஐஸ்கிரீம் சந்தை கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில், பாரம்பரிய குளிர்பானங்களிலிருந்து நவீன ஐஸ்கிரீம... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 35 : `ஆவாரம் பூவில் டிப் டீ முதல் நெல்லி முருங்கை சூப்!’ - Aruvi Eco சக்சஸ் சீக்ரட்

Aruvi Eco`StartUp' சாகசம் 35 :வணிக உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய உத்திகள் என ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம் அடைகின்றன. ஆனால், இந்த வேகமான உலகத்தில் நாம் மறந்துபோன... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 34: `Amazon, IBM வேலைகளை விட்டுட்டு Yellow Bag நிறுவனம் - கணவன், மனைவி சொல்லும் கதை

`StartUp' சாகசம் 34 :இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால், அதோடு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, எனவே இந்தியாவில் சமூகத் தொழில்முனைவோர்களுக்கு (Social Entrepreneurs) ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம்,... மேலும் பார்க்க