செய்திகள் :

TVK மதுரை மாநாடு: "குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது" - மாநாட்டில் உயிரிழந்த ஊட்டி இளைஞர்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

ரித்திக் ரோஷன்
ரித்திக் ரோஷன்

இந்த நிலையில், கோத்தகிரி அருகில் கேம்ப லைன் தூய்மைப் பணியாளர் குடியிருப்புப் பகுதியிலிருந்து மாநாட்டிற்குச் சென்ற 18 வயதான ரித்திக் ரோஷன் என்ற இளைஞர் வெயிலின் தாக்கம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இளைஞரின் இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த துயரம் குறித்துத் தெரிவித்த ரோஷனின் உறவினர்கள், "ரோஷனின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தை கோத்தகிரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். ஆனால், குடி நோயாளி‌‌. சகோதரி கடுமையான உடல்நலக்குறைவால் நாள்தோறும் சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கடுமையான வறுமை மற்றும் இக்கட்டான சூழ்நிலை காரணமாக 11-ம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கொரியர் வேலையில் சேர்ந்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

ரித்திக் ரோஷன்

சக நண்பர்களுடன் மாநாட்டிற்குச் சென்ற இடத்தில் இந்தக் கொடூரம் நடந்திருக்கிறது. வெயிலைத் தாங்க முடியாமல் துவண்டு மூச்சுத்திணறலில் துடித்த அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கூட உரிய நேரத்தில் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பமே தற்போது நிலைகுலைந்து போயிருக்கிறது. உரிய இழப்பீட்டை த.வெ.க அறிவிக்க வேண்டும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விருதுநகர்: நோய், வறுமை, மன உளைச்சல்.. பேச முடியாத மகள்களுடன் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்த தாய்

விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது ... மேலும் பார்க்க

விருதுநகர்: தவெக மாநாட்டுக்கு பேனர் வைத்த கல்லூரி மாணவர்; மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர். இந்த நி... மேலும் பார்க்க

மும்பை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்; அந்தரத்தில் உயிருக்கு போராடிய பயணிகள்; கிரேன் மூலம் மீட்பு

மும்பை மோனோ ரயில்மும்பையில் செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை மோனோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த ஒரு மோனோ ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த மோனோ ரயில் ஒரு சிமெண்ட் பீம... மேலும் பார்க்க

விருதுநகர்: எரிந்து சாம்பலான வைக்கோல் கட்டுகள்; 4 மணி நேரத்திற்கு மேல் போராடிய வீரர்கள் |Photo Album

மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று... மேலும் பார்க்க

விருதுநகர்: பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்; 4 மணிநேரப் போராட்டம்; ரூ.14 லட்சம் நஷ்டம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் சாமிக்காளை. இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் வைக்கோல் கட்டுகளை விற்பனைக... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ரயில்கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்; இண்டர்லாக் சிஸ்டத்தால் விபத்திலிருந்து தப்பிய ரயில்!

ரயில் கேட்டை மூட சென்ற கோகோ பைலட்ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் வாலாந்தரவை ரயில் நிலையத்தை கடந்து வழுதூர் - பெரியபட்டிணம் செல்லும் வழியில் அமைந்துள்... மேலும் பார்க்க