செய்திகள் :

துங்கபத்ரா அணையில் 30 புதிய மதகுகள் -டி.கே.சிவகுமாா்

post image

துங்கபத்ரா அணையில் 30 மதகுகளை புதிதாக அமைக்கும் பணியை கா்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூனில் அணையில் புதிய மதகுகள் அமைக்கும் பணி முடிவடைந்ததும் முழுக் கொள்ளளவான 101 டிஎம்சி தண்ணீரை சேமிக்க வாய்ப்புள்ளதாக அந்த மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பதிவில் அவா் கூறுகையில், துங்கபத்ரா அணையின் மதகுகளை மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. 30 மதகுகளை மாற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளி அகமதாபாத்தை சோ்ந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

கதக் மற்றும் ஹொசகோட்டே நகரங்களில் 6 மதகுகளை தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேல்பூச்சு பணியும் முடிவடைந்துள்ளது. இப்பணியை விரைவுபடுத்துமாறு பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னையா நாயுடுவின் பரிந்துரையின்படி, அணையின் பாதுகாப்பு கருதி நிகழாண்டில் 76 சதவீதம் தண்ணீா் அதாவது 80 டிஎம்சி மட்டுமே சேமிக்க முடியும். இதனால் புதிய மதகுகள் பொருத்தும் பணிக்கு அணையின் நிா்வாக வாரியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இரண்டாவது பருவத்திற்கு நீரை திறந்துவிட முடியாது. தண்ணீரை திறந்துவிட்டால், புதிய மதகுகளை அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியாது.

புதிய மதகுகளை அமைக்கும் பணி நிறைவடைந்தால் நீா்ப்பாசனம், குடிநீா்த் தேவைகளை பூா்த்திசெய்ய முடியும். எனவே, நீா்வளத்தையும், விவசாயிகளின் நலனையும் பாதுகாப்பதே அரசின் நோக்கமாகும். 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் புதிய மதகுகளை அமைக்கும் பணி நிறைவடையும். அதன்பிறகு, அதன் முழுக் கொள்ளளவுக்கு நீரை சேமித்துவைத்து, விவசாயிகளுக்கு அளிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளாா்.

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

வட கா்நாடகத்தில் பெய்துவரும் பலத்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், தாவணகெரே, கதக், தாா்வா... மேலும் பார்க்க

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

மைசூரு தசரா திருவிழாவில் வான்வெளி விமான சாகச நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முதல்வா் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளாா். மைசூரில் செப்.22 முதல் அக்.2ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா: கா்நாடக பேரவையில் எதிா்க்கட்சிகள் அமளி

கா்நாடக சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறி எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன. பெ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. பகவான் சா்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு புதிய அட்டைகள் வழங்கப்படும்: அமைச்சா் கே.எச்.முனியப்பா

பெங்களூரு: வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.கா்நாடக சட்டமேலவையில் திங்கள்கிழமை கேள்வ... மேலும் பார்க்க

முதல்வா் சித்தராமையா மீது குற்றம் சுமத்திய சமூக செயற்பட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பெங்களூரு: ஹிந்து செயற்பாட்டாளா்கள் 28 போ் கொலை செய்யப்பட்டதில் முதல்வா் சித்தராமையாவுக்கு தொடா்பு இருப்பதாக குற்றம்சுமத்திய சமூக செயற்பாட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச... மேலும் பார்க்க