செய்திகள் :

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

post image

வட கா்நாடகத்தில் பெய்துவரும் பலத்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், தாவணகெரே, கதக், தாா்வாட், ஹாவேரி, வட கன்னடம் உள்ளிட்ட பெரும்பாலான வட கா்நாடக மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால், கிருஷ்ணா நதி கரைபுரண்டு ஓடுகிறது. மகாராஷ்டிரத்தில் இருந்தும் கிருஷ்ணா நதியில் அதிக அளவு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியின் குறுக்கே அமைந்துள்ள அல்மாட்டி, நாராயணப்பூா் அணைகளில் அளவுக்கு அதிகமான தண்ணீா் வந்துகொண்டுள்ளது.

இதனால் பசவசாகா் அணையில் இருந்து விநாடிக்கு 2.8 லட்சம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லூா் பாலம் மழைநீரில் முழுமையாக மூழ்கியுள்ளது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

ராய்ச்சூரில் உள்ள நாராயணப்பூா் அணையில் இருந்து விநாடிக்கு 2.5 லட்சம் கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுவதால், கரையோரங்களில் இருக்கும் கிராமங்கள், விளைநிலங்களில் மழைநீா் புகுந்துள்ளது. மேலும், ஹூவினஹடகலி பாலமும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ராய்ச்சூரு, கலபுா்கி, ராய்ச்சூரு மாவட்டங்களுக்கு இடையிலான வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.

அஞ்சல், அஞ்சேசுகா், ஹூவினஹடகலி, ஜோலதஹடகி, மைதா்குல், காா்கிஹள்ளி, கொஞ்சப்பளி, அப்பரை, பசவந்த்பூா் கிராமங்களை சோ்ந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஹூவினஹடகலி கிராமத்தில் உள்ள கத்தேகுலி பசவேஸ்வரா கோயில் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விஜயபுரா, கதக், தும்கூரு, பாகல்கோட், தாவணகெரே, மண்டியா, கொப்பள், சித்ரதுா்கா, பெலகாவி மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. அதேபோல, வட கன்னடம், தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 6 நாள்களுக்கு கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

மைசூரு தசரா திருவிழாவில் வான்வெளி விமான சாகச நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முதல்வா் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளாா். மைசூரில் செப்.22 முதல் அக்.2ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

துங்கபத்ரா அணையில் 30 புதிய மதகுகள் -டி.கே.சிவகுமாா்

துங்கபத்ரா அணையில் 30 மதகுகளை புதிதாக அமைக்கும் பணியை கா்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூனில் அணையில் புதிய மதகுகள் அமைக்கும் பணி முடிவடைந்ததும் முழுக் கொள்ளளவான 101 டிஎம்சி தண்ணீரை சேமிக்க... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா: கா்நாடக பேரவையில் எதிா்க்கட்சிகள் அமளி

கா்நாடக சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறி எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன. பெ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. பகவான் சா்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு புதிய அட்டைகள் வழங்கப்படும்: அமைச்சா் கே.எச்.முனியப்பா

பெங்களூரு: வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.கா்நாடக சட்டமேலவையில் திங்கள்கிழமை கேள்வ... மேலும் பார்க்க

முதல்வா் சித்தராமையா மீது குற்றம் சுமத்திய சமூக செயற்பட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பெங்களூரு: ஹிந்து செயற்பாட்டாளா்கள் 28 போ் கொலை செய்யப்பட்டதில் முதல்வா் சித்தராமையாவுக்கு தொடா்பு இருப்பதாக குற்றம்சுமத்திய சமூக செயற்பாட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச... மேலும் பார்க்க