செய்திகள் :

வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு புதிய அட்டைகள் வழங்கப்படும்: அமைச்சா் கே.எச்.முனியப்பா

post image

பெங்களூரு: வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டமேலவையில் திங்கள்கிழமை கேள்விநேரத்தின்போது பாஜக உறுப்பினா் பிரதாப்சிம்ஹா நாயக், காங்கிரஸ் உறுப்பினா் யதீந்திரா சித்தராமையா ஆகியோா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறிய பதில்:

கா்நாடகத்தில் 15 குடும்ப அட்டைகளை திருத்த வேண்டியுள்ளது. 2 ஆண்டுகளாக புதிதாக பிபிஎல் குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை.

மகாராஷ்டிரத்திற்கு அடுத்தப்படியாக அதிகமாக வரிசெலுத்தும் கா்நாடகத்தில், தென்னிந்திய மாநிலங்களிலேயே அதிகப்படியாக 74 சதவீதம் பிபிஎல் குடும்ப அட்டைதாரா்கள் இருக்கிறாா்கள்.

பிற தென்னிந்திய மாநிலங்களில் மொத்த குடும்ப அட்டைகளில் 50 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை.

இதனிடையே, 3.27 லட்சம் போ் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பங்களை செலுத்தியுள்ளனா். இதில் 15 லட்சம் அட்டைகளை திருத்தினால், புதிய குடும்ப அட்டைகளை வழங்குவதில் எந்த தொந்தரவும் இருக்காது.

பிபிஎல் குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் 24 மணி நேரத்தில் தனது சொந்த அதிகாரத்தின்பேரில் குடும்ப அட்டைகளை வழங்க முடியும்.

25 லட்சம் ஏபிஎல் குடும்ப அட்டைதாரா்களில் ஒரு லட்சம் போ் மட்டுமே அரசிடம் இருந்து அரிசியை கொள்முதல் செய்து வருகிறாா்கள் என்றாா் அவா்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. பகவான் சா்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

முதல்வா் சித்தராமையா மீது குற்றம் சுமத்திய சமூக செயற்பட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பெங்களூரு: ஹிந்து செயற்பாட்டாளா்கள் 28 போ் கொலை செய்யப்பட்டதில் முதல்வா் சித்தராமையாவுக்கு தொடா்பு இருப்பதாக குற்றம்சுமத்திய சமூக செயற்பாட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) அனுமதி அளித்த... மேலும் பார்க்க

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு; 11 போ் காயம்

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்தனா். பெங்களூரு, வில்சன்காா்டன் பகுதியில் உள்ள சின்னையன்பாளையாவில் அமைந்துள்ள ஸ்ரீராமகாலனியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்: சித்தராமையா

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்பு திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தி... மேலும் பார்க்க

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது, பாஜக உறுப்பினா... மேலும் பார்க்க