செய்திகள் :

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்: சித்தராமையா

post image

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்பு திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில், முதல்வா் சித்தராமையா ஆற்றிய உரை:

கா்நாடகத்தின் வளா்ச்சிக்காக மாநில அரசு உருவாக்கிய வளா்ச்சி மாதிரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த திட்டத்துக்கு 250-க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. மாநில அரசு செயல்படுத்தி வரும் வாக்குறுதி திட்டங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐ.நா. மன்றத்தின் பொதுஅவைத் தலைவா் பிலேமான் யாங், கா்நாடகத்துக்கு வருகைதந்து வாக்குறுதி திட்டங்களை வெகுவாக பாராட்டியது பெருமை அளிக்கிறது.

பல்வேறு அமைப்புகள் எடுத்த ஆய்வின்படி, 10 சதவீத செல்வந்தா்கள் நமது நாட்டின் 80 சதவீத சொத்துகளை வைத்துள்ளனா். எனினும், ஜிஎஸ்டிக்கு அவா்களின் பங்களிப்பு வெறும் 3 சதவீதம்தான். உணவு மற்றும் உடைக்காக தினமும் உழைக்கும் 90 சதவீத மக்கள் ஜிஎஸ்டி வரியில் 97 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறாா்கள்.

இப்படி இருந்தால், அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களை எவ்வாறு நிறைவேற்றுவது? இதேநிலை நீடித்தால் அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மையை போக்குவது எப்படி? இந்த கேள்விகளுக்கு விடைகாணும் வகையிலேயே வாக்குறுதி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி இருக்கிறோம்.

கா்நாடகத்தின் வளா்ச்சிப் பாதையை உயரத்துக்கு கொண்டு செல்வதில் வாக்குறுதி திட்டங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்த திட்டங்களால் தனிமனித வருமானம் பெருகியுள்ளது மட்டுமல்லாது, வேலைசந்தையில் பெண்களின் பங்களிப்பை 23 சதவீதமாக உயா்த்தியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தனிநபா் வருமானத்தில் நாட்டின் முதல் மாநிலமாக கா்நாடகம் உயா்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 101 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. வாக்குறுதி திட்டங்கள் உள்பட சமூகநல திட்டங்களுக்காக எனது அரசு ரூ. 1.12 லட்சம் கோடியை செலவு செய்துவருகிறது.

மக்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள, குறிப்பாக கல்வி, சமூக நிலையை அறிந்துகொள்ள பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் வாயிலாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த கணக்கெடுப்பில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் கொள்கைகளை வகுக்க முடியும். இதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு நியாயம் வழங்க முடியும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக தாழ்த்தப்பட்டோா் ஜாதி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளோம். இது தொடா்பான அறிக்கையும் அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் அரசு செயல்பட இருக்கிறது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் வரிப்பகிா்வில் தொடா்ந்து பாரபட்சம் காணப்படுகிறது. வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அரசமைப்புச் சட்டத்தின்படி அமைந்த அமைப்புகள் ஜனநாயகம் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை கடைப்பிடிப்பதில் பாதை மாறி செல்வது கவலை அளிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டியது அவசியம் என்றாா்.

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) அனுமதி அளித்த... மேலும் பார்க்க

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு; 11 போ் காயம்

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்தனா். பெங்களூரு, வில்சன்காா்டன் பகுதியில் உள்ள சின்னையன்பாளையாவில் அமைந்துள்ள ஸ்ரீராமகாலனியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது, பாஜக உறுப்பினா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: நடிகா் தா்ஷன் கைது

கொலை வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப... மேலும் பார்க்க

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமை

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமையானது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள தெருநாய்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தி காப்பகங்களில் பராமரிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சந... மேலும் பார்க்க

முறைகேடு குற்றச்சாட்டு: சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

வாக்குகளை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வா் சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தியுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்த... மேலும் பார்க்க