செய்திகள் :

அவசரமாக கோவையில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்! ஏன்?

post image

கோவை: துபாயில் இருந்து கொச்சி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறக்கப்பட்டது.

உணவு, குடிநீர் எதுவுமின்றி அவதிக்குள்ளான பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்போன் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மோசமான வானிலை நிலவியது, இதனால் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல், பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில், துபாயில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கேரளம் மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்த பைஸ் ஜெட் தனியார் விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் விமானத்திலே அமர வைத்ததாகவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் எதுவும் வழங்கவில்லை என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 2 மணிக்கு பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை கோவையில் இருந்து கேரளத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதம் ஈடுபடும் செல்போன் விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக புதினுடன் டிரம்ப் பெருமிதம்!

A SpiceJet flight from Dubai to Kochi was forced to land in Coimbatore due to bad weather.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக புதினுடன் டிரம்ப் பெருமிதம்!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையின் போது இந்தியா - பாகிஸ்தான் உள்பட ஐந்து போர்களை தானே மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக மீண்டும் பெ... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

திண்டுக்கல்: அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மகனும் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மகள் இந்திராணி ஆகியோரது வீடு மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகா... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ராமதாஸ் சோரன்(62) உடல்நலக் குறைவால் தில்லியில் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனை முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தி உள்ளார். ஜார்கண்ட் பள்ள... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை, மதுரை, திண்டுக்கல் என அவருக்கு த... மேலும் பார்க்க

காளிமுத்து மறைவு: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் இரங்கல்

சமூக வலைத்தளங்களில் திமுக கொள்கைகள் - சாதனைகளை இடைவிடாது எழுதி வந்த காளிமுத்து மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், கனிமொழி எம்.பி. ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமிழக முதல்வர் மு.க... மேலும் பார்க்க

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

நாட்டின் 79-ஆவது விடுதலைத் திருநாளை முன்னிட்டு ‘குறிஞ்சி’ இல்ல வளாகத்தில் நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 79 ஆவது சுதந்திர நாள் நாடு முழுவதும் இன்று... மேலும் பார்க்க