செய்திகள் :

காளிமுத்து மறைவு: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் இரங்கல்

post image

சமூக வலைத்தளங்களில் திமுக கொள்கைகள் - சாதனைகளை இடைவிடாது எழுதி வந்த காளிமுத்து மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், கனிமொழி எம்.பி. ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், தனது கருப்பு சிவப்பு உணர்வால், இணையத்தில் கழகத்தின் முகங்களில் ஒருவராக அறியப்பட்டவரும், கழகமே தனது அடையாளம் எனச் செயல்பட்டவருமான அன்புத்தம்பி காளிமுத்து மறைந்த செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.

துடிப்புமிக்க இளம் உடன்பிறப்பான காளிமுத்தை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சமூக வலைத்தளங்களில் திமுக கொள்கைகள் - சாதனைகளை இடைவிடாது எழுதி வந்த அன்புத்தம்பி காளிமுத்து மறைந்தார் என்ற செய்திக் கேட்டு வருந்தினேன்.

இணையத்தில் கருத்துப் போரிட்ட கழகச்சிப்பாய் காளியின் கொள்கைப் பணி போற்றதலுக்குரியது. அவரைப்போன்ற தன்னலமற்ற கருப்பு - சிவப்பு தொண்டர்களே அன்றும், இன்றும் கழகத்தின் கேடயம்.

காளிமுத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தார் - நண்பர்கள் - உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி, எம்.பி. இரங்கல்

திமுக தீவிரப் பற்றாளர் காளிமுத்து மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

கட்சி கொள்கைகளைப் பற்றிக்கொண்டு ஆற்றல்மிக்க உடன்பிறப்பாக இணையத்தில் செயல்பட்டவர். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

CM M.K. Stalin, Deputy CM and Kanimozhi MP have expressed condolences on the demise of Kalimuthu.

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

நாட்டின் 79-ஆவது விடுதலைத் திருநாளை முன்னிட்டு ‘குறிஞ்சி’ இல்ல வளாகத்தில் நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 79 ஆவது சுதந்திர நாள் நாடு முழுவதும் இன்று... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

தூய்மைப் பணியாளர்கள் நலன் காக்கும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.முதல்வர் மு.க.ஸ்டாலினை ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையிலிருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை மேற்கொள்ளும் இருசக்கர... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டம் கோலாகலம்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.விழா நடைபெறும் மைதானத்துக்கு காலை 9 மணிக்கு வ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆட்சியர்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.முன்னதாக,மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் கு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் த... மேலும் பார்க்க