செய்திகள் :

பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து ஏன்? - அமைச்சர் விளக்கம்

post image

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சுதந்திர நாளையொட்டி சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் அமைச்சர் அன்பில் மகேஸ். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு அடித்தளமாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே அவர்களுக்கு மன அழுத்தமாக மாறி விடக் கூடாது. அதனால்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகள் மாணவர்கள் தேர்வு எழுதுவது மன அழுத்தத்தை உண்டாக்கும்.

எனினும் பிளஸ் 1 பாடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அதைத் தவிர்க்க முடியாது. பிளஸ் 1 பாடங்கள் பள்ளிகளில் முழுமையாக நடத்தப்படும்.

பிளஸ் 1 பாடங்களை நன்றாகப் படித்தாலே போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம்.

தமிழகத்தில் தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கல்வித் திட்டம் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டின் தலைவர்கள், தமிழ்நாட்டின் முக்கியத்துவம் பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக மாணவர்களின் கல்வி குறித்து ஆளுநர் பேசிய கருத்துகள் ஏற்புடையதல்ல" என்று பேசினார்.

Minister for School Education of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi explained on plus 1 public exam cancellation

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாளையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வியாழக்கிழமையில் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தார். இருப்பினும், அவரது அழைப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், திமுக கூ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஒடிசா, ... மேலும் பார்க்க

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் தேரோட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாறு கிராமத்தில் உள்ள மோட்ச ராக்கினி மாதா என்று அழைக்கப்படும் விண்ணேற்ற மாதா கோயிலின் நானூற்று அறுபத்தெட்டாவது (468) ஆண்டுத் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. ஐநூறு ஆண... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரு நாள்களுக்கு(ஆக. 15, 16) பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (14-08-2025) வடமேற்கு ம... மேலும் பார்க்க

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.தமிழக அரசு, தன்னுடைய... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி இன்று(ஆக.... மேலும் பார்க்க