செய்திகள் :

தூய்மைப் பணி: "11 மண்டலங்களை தனியார்மயமாக்கியது அதிமுக; அதற்கு அதிமுகவின் பதில் என்ன?" - திருமா

post image

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாக தனியார்மயமாதலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.

அடுத்த நாளான நேற்று (ஆகஸ்ட் 14) ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை விட்டுவிட்டு புதிதாக 6 திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

CM Stalin - தூய்மைப் பணியாளர்கள்
CM Stalin - தூய்மைப் பணியாளர்கள்

இன்று, அரசின் இத்திட்டங்களுக்கு தூய்மைப் பணியாளர்கள் நன்றி தெரிவிப்பதாக, அமைச்சர் சேகர் பாபுவும், மேயர் பிரியாவும் தூய்மைப் பணியாளர்கள் குழு ஒன்றை முதல்வரிடம் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் குறித்துப் பேசிய விசிக தலைவர் மற்றும் எம்.பி., தொல். திருமாவளவன், "தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் தொடக்கத்திலிருந்தே அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறோம்.

இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் துறைகளாக இருந்தாலும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் துறைகளாக இருந்தாலும் தனியார்மயப்படுத்துதல் தீவிரமடைந்து வருகிறது. இதை எதிர்க்க வேண்டும்.

இந்தப் பிரச்னையில் வி.சி.க தமிழ்நாடு அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள், `தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும். தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில், நகராட்சிகளில், பேரூராட்சிகளில், ஊரக அமைப்புகளில் பணியாற்றக்கூடிய தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். அவர்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது'.

தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்திருக்கத் தேவையில்லை. கைது நடவடிக்கை மற்றும் அவர்கள் மீது வழக்குப் போடப்பட்டிருப்பதைக் கண்டிப்பதோடு, அந்த வழக்குகளைத் திரும்பப்பெற வலியுறுத்துகிறோம்.

இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமான அணுகுமுறை. தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட, இப்பிரச்னையைப் பயன்படுத்தி தி.மு.க கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் பெரும்பாலும் தலித்துகளாகத்தான் இருக்கிறார்கள், அதனால் இந்தப் பிரச்னையை தலித்துகள்தான் பேச வேண்டும், திருமாவளவன்தான் பேசவேண்டும் என்ற பார்வை ஏற்புடையதல்ல.

13 நாள்களாக அ.தி.மு.க என்ன செய்துகொண்டிருந்தது. கடைசி நாளில் போலீஸ் கைதுசெய்யும்போதுதான் எடப்பாடி பழனிசாமி வாய்திறக்கிறார். 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியார்மயப்படுத்தினார்களே அதற்கு அவர்களின் பதில் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

OPS: "தமிழ்நாடு புறவழிச் சாலைகளிலும் சுங்க கட்டணமா?" - திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு

தமிழ்நாட்டு புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க அரசை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்... மேலும் பார்க்க

RN Ravi: "ஆளுநர் ரவிக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு?" - கனிமொழி எம்.பி கேள்வி

நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தனது பேச்சில் ஆளும் திமுக அரசின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரி... மேலும் பார்க்க

மோடியின் சுதந்திர தின உரை: "தான் ஒரு RSS தயாரிப்பு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்" - திருமா

டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பிரதமர் மோடியின் கொடியேற்றத்துடன் இன்று நடைபெற்றது.அப்போது பிரதமர் மோடி தனது உரையில், 1948, 1975-77, 1992 என மூன்று முறை மத்திய அ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டிற்கு இதைக் கொண்டு வராமல், புதிய விமான நிலையங்கள் திறந்து என்ன பயன்?" - டி.ஆர்.பி. ராஜா

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்... "மத்திய விமானப் ப... மேலும் பார்க்க

புதுச்சேரி: "தனிநபர் வருமானம் ரூ. 3,02,680 லட்சமாக உயர்வு" - முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரை

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ரங்கசாமி.தொடர்ந்து பேசிய அவர், `... மேலும் பார்க்க

ஈரோடு: 79வது ஆண்டு சுதந்திர தினம் விழா; ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாட்டம் | Photo Album

ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர த... மேலும் பார்க்க