செய்திகள் :

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

post image

எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களையும் தலைவர்களையும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள வீடு, திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்த கேள்விக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதில் அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தேர்தல் ஆணையத்தை தன் கையில் வைத்துக்கொண்டு பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் போன்றவற்றை ஜனநாயகத்தின் மீது ஏவிவிட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரத்தில் திமுகவில் மூத்த அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளின் மூலமாக கணைகளைத் தொடுக்கின்றனர். இந்த அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதலுக்கு ஆயுதமாக, கருவியாக மாற்றிவைத்துள்ளனர். அப்படிப்பட்ட ஒன்றுதான் இன்று நடைபெறும் ரெய்டுகள். திமுக இதனை எதிர்கொள்ளும்.

அமைச்சர் பெரியசாமி எத்தனையோ சிக்கல்களை எதிர்கொண்டு கட்சியோடு உறுதியாக நிற்கக்கூடிய ஒருவர். எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களை, தலைவர்களை அச்சுறுத்த முடியாது" என்று கூறினார்.

DMK MP Kanimozhi responds to ED raid on Minister Periyasamys house

இதையும் படிக்க | அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

இல.கணேசன் உடல் தகனம்

சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இல.கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கூகுள் க்ரோம் என்ன விலை? ரூ. 3 லட்சம் கோடிக்கு வாங்கும் தமிழர்?

கூகுள் க்ரோமை சென்னை வம்சாவளி வாங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளார்.தொழில்நுட்ப உலகில் தனக்கென தனியிடத்தை பல ஆண்டுகளாகத் தக்கவைத்து வருகிறது, கூகுள் நிறுவனம். கூகுள் ப்ரவுசர் (தேடுபொறி), வரைபடம், மின்... மேலும் பார்க்க

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வருகின்ற 18-ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி... மேலும் பார்க்க

பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக

சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள வீடு, திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை மு... மேலும் பார்க்க

தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!

கட்சியின் விதிகளை மீறியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் அயன்புரம் கே. சரவணன் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் நீலகிரிm கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வருகின்ற 18-ஆம் தேதி... மேலும் பார்க்க