செய்திகள் :

"RSS ஒருபோதும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை" - மோடியை விமர்சித்த கனிமொழி

post image

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்ந்து பேசியதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

"ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன்மயமான அத்தியாயம். ஸ்வயம் சேவகர்கள் நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஒரு வகையில், உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ். இது 100 ஆண்டுக்கால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது" என்றார் மோடி.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் தயாரிப்பு என்பதை அவர் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தைத்தான் நிறைவேற்றி வருகிறார்கள். அதனால்தான் இன்றைக்கு நாடு முழுவதும் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் பதற்றம் நிலவுகிறது, வன்முறைகள் வெடிக்கின்றன." எனப் பேசியிருந்தார்.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர், "இருந்தும் பிரதமர் மோடி, 2025-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி தனது ஓய்வில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்க்காக இதை பேசியுள்ளார்." என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக எம்.பி கனிமொழி, "RSS இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்கவில்லை. இன்று அதைப் புகழ்ந்து பேசுவது, பொய்களால் வரலாற்றை மறுவரைவு செய்யும் ஒரு தீவிர முயற்சியே—பாஜக நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ஒரு தந்திரம், பாடநூல்களைத் திரித்து, நாடாளுமன்ற மனுக்களில் உண்மைகளைத் திருப்பிப் போடுவதன் மூலமும் இதையே செய்ய நினைக்கின்றனர்." என தனது சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: `RSS' - காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பேசிய உரைகளில் நேற்று பேசிய உரைதான் (... மேலும் பார்க்க

Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்..." - அமைதிக்கு அமெரிக்கா காட்டும் வழி என்ன?

ஆகஸ்ட் 14ம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் மற்றும் நேட்டோ தலைவர்களை அழைத்து, ரஷ்யா போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்றும் விரிவான ஒப்பந்தத்துக்கு தய... மேலும் பார்க்க

அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறுத்தமா?|Explained

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு 'ஒருவழியாக' முடிந்துவிட்டது. 'நல்லபடியாக' என்று சொல்லாமல், ஒருவழியாக என்று சொல்வதற்கு காரணம் உண்டு. விட்டுக்கொடுக்காத புதின் 2022-ம் ஆண்டு பிப்ரவ... மேலும் பார்க்க

MK Stalin: "அமெரிக்கா வரியால், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்" - பிரதமருக்கு அவசர கடிதம்!

அமெரிக்க அதிபர் இந்தியா மீது விதித்துள்ள 50% வரியினால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்றும், இதனை சமாளிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி ... மேலும் பார்க்க

PMK: "வணக்கம் என்றார்; நானும் வணக்கம் என்றேன்"- அன்புமணியுடன் சமாதானமா என்ற கேள்விக்கு ராமதாஸ் பதில்

தைலாபுரத்தில் இன்று ( ஆகஸ்ட்16) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது, "பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகச் சில விஷமிகள் வதந்தி பரப்புவதாகச் செய்திகள் வருகின்றன.நாளை ... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: ஸ்டாலின் முதல் சீமான் வரை தலைவர்கள் நேரில் அஞ்சலி | Photo Album

இல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல... மேலும் பார்க்க