செய்திகள் :

வாக்குத் திருட்டு விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வாக்குரிமைப் பேரணி! -தேஜஸ்வி

post image

வாக்குத் திருட்டு விவகாரத்தில் முக்கிய நகர்வாக மெகா பேரணி பிகாரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறோம் என்று பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்திரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பிகாரில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மேற்கொள்கிறாா்.

நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான முறைகேடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை மேற்கொள்ள எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இது குறித்து, தேஜஸ்வி யாதவ் இன்று(ஆக. 16) தெரிவித்திருப்பதாவது: "‘வாக்கு அதிகார யாத்திரையை’ சாசாராம் பகுதியிலிருந்து நாளை(ஆக. 17) நாங்கள் தொடங்குகிறோம். ‘மகாகாத்பந்தன்’ கூட்டணிக் கட்சிகளுடன் நங்கள் அனைவரும் நாளை நிற்போம்.

இந்தப் பேரணியில் நாங்கள் பல மாவட்டங்களுக்குச் செல்வோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்களின் இந்த முயற்சி. இதன்மூலம், எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுபடவில்லை என்பதை அடைய முடியும்” என்றார்.

Tejashwi Yadav says, " We are starting the ‘Vote Adhikar Yatra’ from Sasaram tomorrow. our effort will be to make people aware so that no voter's name is left out."

இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்

இந்தியாவில் உள்ள மொத்த ஹிந்துக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுடன் இல்லை என்று ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.பிரசாந்த் கிஷோர் பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(ஆக. 16) பிரசா... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு... நாளை நடைபெறுகிறது!

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை(ஆக. 17) நடைபெறுகிறது. இந்தத் தகவலை இன்று(ஆக. 16) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.ஞாயிற்றுக்கிழமை(ஆக. 17) மாலை 3 மணிக்கு புது தில்லியி... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலை... மேலும் பார்க்க

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் பயணம்!

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் செல்கிறார். இரண்டு நாள் பயணமாக மிஸ்ரி காத்மாண்டு செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டின் வெளியுறவுச் செயலர்களும் இந்தியா - நேபாளம் இடையிலான உறவு க... மேலும் பார்க்க

காஷ்மீரில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கும் பணியில் முழுவீச்சில் ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கும் பணிகளில் முழுவீச்சில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராம... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது: தென் கொரிய வெளியுறவு அமைச்சர்

இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சர் எஸ். சிவசங்கர் உடனான சந்திப்பு குறித்து அவர் பேசியதா... மேலும் பார்க்க