செய்திகள் :

ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 130 பேர் காயம்

post image

ரஷியாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.

மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலாஸ்டிக் ஆலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 130 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 29 பேர் சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

13 பேர் ரியாசனிலும் 16 பேர் மாஸ்கோவில் உள்ள மருத்துவ மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ரஷிய அரசு செய்தி நிறுவனமான ரியா நோவோஸ்டி படி, அந்த நிலையத்தில் உள்ள துப்பாக்கி குண்டு பட்டறையில் தீப்பிடித்து பின்னர் வெடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்

இதனிடையே தீ விபத்து காரணமாக ரியாசன் பகுதியில் திங்கள்கிழமை ஒரு நாள் துக்க அனுசரிக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் அறிவித்தனர். நான்கு ஆண்டுகளுக்குள் எலாஸ்டிக் ஆலையில் நடந்த இரண்டாவது பயங்கர விபத்து இதுவாகும். கடந்த 2021ஆம் ஆண்டு வெடிபொருள்களை உற்பத்தி செய்யும் ரஸ்ரியாட் பட்டறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் பலியாகினர்.

A fire at an industrial plant in Russia's Ryazan region on Friday killed 11 people and injured 130, Russian officials said Saturday.

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

ரஷியாவின் ரியாசன் பகுதியிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 130 போ் காயமடைந்தனா். தலைநகா் மாஸ்கோவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலையில் உள்ள வெடிமருந்து பட்டறையி... மேலும் பார்க்க

காஸா மக்களை குடியமா்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை

போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமா்த்துவது தொடா்பாக அந்த நாட்டுடன் இஸ்ரேல் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீா்முழ்கி

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது.பாகிஸ்தான் கடற்படை வலிமையை மேம்படுத்த எட்டு ஹங்கோா் வகை நீா்முழ்கிக் கப்பல்களை வழங்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத... மேலும் பார்க்க

மியான்மா் ராணுவ விமானத் தாக்குதலில் 21 போ் உயிரிழப்பு

மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உட்பட 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து கிளா்ச்சி ஆயுதக் குழுவினா், உள்ளூா் மக்கள... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!

பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 307 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா ம... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் சந்திப்பு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? -வெளியுறவு அமைச்சகம் பதில்

ரஷிய அதிபா் புதின் அலாஸ்காவில் வெள்ளிக்கிழமை(ஆக. 15) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். ஆனால், இந்த ஆலோசனையின் முடிவில், ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்கியிருந்த உக்ரைன் - ரஷியா ப... மேலும் பார்க்க