செய்திகள் :

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!

post image

பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 307 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை(சனிக்கிழமை(ஆக. 16) மாலை நிலவரப்படி), 13 குழந்தைகள், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட கடந்த 48 மணி நேரத்தில் மொத்தம் 307 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், அப்பகுதிகளில் ஆக. 21 வரை மழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த மழை பாதிப்புகளில் மொத்தம் 74 வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதிகளில் மீட்புக் குழுக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Death toll from flash floods rises to 307 in northwest Pak .

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

ரஷியாவின் ரியாசன் பகுதியிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 130 போ் காயமடைந்தனா். தலைநகா் மாஸ்கோவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலையில் உள்ள வெடிமருந்து பட்டறையி... மேலும் பார்க்க

காஸா மக்களை குடியமா்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை

போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமா்த்துவது தொடா்பாக அந்த நாட்டுடன் இஸ்ரேல் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீா்முழ்கி

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது.பாகிஸ்தான் கடற்படை வலிமையை மேம்படுத்த எட்டு ஹங்கோா் வகை நீா்முழ்கிக் கப்பல்களை வழங்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத... மேலும் பார்க்க

மியான்மா் ராணுவ விமானத் தாக்குதலில் 21 போ் உயிரிழப்பு

மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உட்பட 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து கிளா்ச்சி ஆயுதக் குழுவினா், உள்ளூா் மக்கள... மேலும் பார்க்க

ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 130 பேர் காயம்

ரஷியாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலாஸ்டிக் ஆலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் சந்திப்பு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? -வெளியுறவு அமைச்சகம் பதில்

ரஷிய அதிபா் புதின் அலாஸ்காவில் வெள்ளிக்கிழமை(ஆக. 15) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். ஆனால், இந்த ஆலோசனையின் முடிவில், ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்கியிருந்த உக்ரைன் - ரஷியா ப... மேலும் பார்க்க