செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிப்பு

post image

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் வியாழக்கிழமை பயங்கர மேகவெடிப்பால் மிக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி, சிஐஎஸ்எஃப் வீரா்கள் இருவா் உள்பட 46 போ் உயிரிழந்தனா்.

மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 82 பேர் காணாமல் போயினர். மாயமான பலரை தேடும் பணி சனிக்கிழமை மூன்றாவது நாளாக தொடா்கிறது. தற்போது இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கிய உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஒமா் அப்துல்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் பயணம்!

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை அவர் அறிவித்துள்ளார். பேரிடரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.50,000 மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஒமா் அப்துல்லா அறிவித்தார்.

Jammu and Kashmir Chief Minister Omar Abdullah on Saturday announced ex-gratia relief for those affected by the recent cloudburst and flash floods in Chisoti village of Kishtwar district.

இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்

இந்தியாவில் உள்ள மொத்த ஹிந்துக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுடன் இல்லை என்று ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.பிரசாந்த் கிஷோர் பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(ஆக. 16) பிரசா... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு... நாளை நடைபெறுகிறது!

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை(ஆக. 17) நடைபெறுகிறது. இந்தத் தகவலை இன்று(ஆக. 16) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.ஞாயிற்றுக்கிழமை(ஆக. 17) மாலை 3 மணிக்கு புது தில்லியி... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வாக்குரிமைப் பேரணி! -தேஜஸ்வி

வாக்குத் திருட்டு விவகாரத்தில் முக்கிய நகர்வாக மெகா பேரணி பிகாரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறோம் என்று பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்திரிய ஜனதா தளம்... மேலும் பார்க்க

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் பயணம்!

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் செல்கிறார். இரண்டு நாள் பயணமாக மிஸ்ரி காத்மாண்டு செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டின் வெளியுறவுச் செயலர்களும் இந்தியா - நேபாளம் இடையிலான உறவு க... மேலும் பார்க்க

காஷ்மீரில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கும் பணியில் முழுவீச்சில் ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கும் பணிகளில் முழுவீச்சில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராம... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது: தென் கொரிய வெளியுறவு அமைச்சர்

இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சர் எஸ். சிவசங்கர் உடனான சந்திப்பு குறித்து அவர் பேசியதா... மேலும் பார்க்க