செய்திகள் :

"என்னை ஏன் திருமணம் செய்தாய்?" - வைரலாகும் அமெரிக்க பெண்ணின் கேள்வியும், இந்தியரின் பதிலும்!

post image

இந்தியர் ஒருவர் தனது அமெரிக்க மனைவியிடம், அவரைத் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தை விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில் வரும் கணவன் மனைவியின் பெயர் அனிகேத், கேண்டஸ் கர்னே. அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அந்த வீடியோவில், "அனிகேத், நீ ஏன் என்னைத் திருமணம் செய்தாய்" என்று கேண்டஸ் கர்னே தன் கணவரிடம் கேட்டார்.

அனிகேத் - கேண்டஸ் கர்னே
அனிகேத் - கேண்டஸ் கர்னே

அதற்கு அனிகேத், "உன்னை முதன்முதலில் சந்தித்தபோது, நீ என்ன செய்கிறாய் என்பது பற்றி கூறியவற்றால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நீ ஆசிரியை என்பதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அன்று இரவு நீ கூறிய அனைத்தும் என்னை ஈர்த்தது. உன்னுடன் இருக்கும்போது மிக இனிமையாக உணர்ந்தேன்.

உன் குடும்பத்தினரையும் எனக்குப் பிடிக்கும். அவர்களுடன் பேசி அவர்களை அறிந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

எனக்கு மிகவும் நட்புரீதியான சூழல் கிடைத்தது. இது ஒரு நல்ல குடும்பம் என்று நினைத்தேன்.

நான் ஒரு நல்ல குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன். அதனால்கூட உன்னைத் திருமணம் செய்திருக்கலாம்" என்று கூறினார்.

வேகமாகப் பரவிவரும் இந்த வீடியோ இணையதளவாசிகள் பலரையும் கவர்ந்திருக்கிறது. அதில் இணையதளவாசி ஒருவர் இந்த வீடியோவுக்கு, "இந்தியாவில், திருமணம் என்பது தனிநபர்களை விட குடும்ப உறவுகளைப் பற்றியது" என்று கமெண்ட்டில் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் இன்னொருவர், "நான் இந்தியன். உண்மையைச் சொன்னால், நீங்கள் இருவரும் ஒன்றாக அழகாக இருக்கிறீர்கள். கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்" என்று கமெண்ட்டில் வாழ்த்தியிருக்கிறார்.

உ.பி: சட்டமன்ற வளாகத்தில் இடையூறாக நின்ற அமைச்சர் கார் - கிரேன் மூலம் அப்புறப்படுத்திய போலீஸார்!

உத்தரப்பிரதேச சட்டமன்ற வளாகத்திற்குள் அமைச்சர் சஞ்சய் நிஷாத் தனது காரை வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு இருந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். அவர் காரை வழக்கமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்த... மேலும் பார்க்க

`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட் ஸ்பாட் டு என்ஜாய்

களக்காடு - தலையணை அருவிஅடிக்கிற வெயிலுக்கு உடம்பு சூட்டை தணிக்க திருநெல்வேலி மக்கள் எப்போதும் எதிர்பார்க்கிறது குற்றாலம் சீசன் தான்.ஆனா எல்லா சீசன்லயும் தண்ணி, சும்மா அடிச்சிட்டு வரணும்னா அதுக்கான ஒரே... மேலும் பார்க்க

Jessica Radcliffe: திமிங்கலம் பெண் பயிற்சியாளரை தாக்கி நீருக்குள் இழுத்துச் சென்றதா? - உண்மை என்ன?

பசிபிக் ப்ளூ மரைன் பூங்காவில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோவில் "ஜெசிகா ராட்கிளிஃப்" என்ற பெண் பயிற்சியாளரை திமிங்கலம் திடீரென மேலே பாய்ந்து நீருக்குள் இழுத்துச் செல்கிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த ப... மேலும் பார்க்க

``ஆதார், பான், வாக்காளர் அட்டை இருந்தால் மட்டும் இந்திய பிரஜையாகிவிட முடியாது!" - மும்பை ஹைகோர்ட்

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளை போலீஸார் கைது செய்து அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தி வருகின்றனர். மும்பை தானேயில் பாபு அப்துல் என்பவரை போலீஸார் கைது... மேலும் பார்க்க

’5 மாதம் டேட்டிங் செய்தேன்..’ AI காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்

இந்த செயற்கை நுண்ணறிவு, பொழுதுபோக்கு, வேலைகளில் மட்டுமில்லாமல் மனித உறவுகளிலும் ஊடுருவியுள்ளது. அப்படி செயற்கை நுண்ணறிவு நமது அன்றாட வாழ்வில் எவ்வளவு ஆழமாகப் புகுந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் வகையில... மேலும் பார்க்க

China Robot Mall: வாலாட்டும் நாய் முதல் பரிமாறும் சர்வர் வரை; எல்லாம் ரோபோ மயம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னால் சீன தலைநகர் பெய்ஜிங்கில், உலகின் முதல் ரோபோக்கள் விற்பனையகமான '4 S' என்கிற ரோபோ மால் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மாலில் மனித உருவ ரோபோக்கள் உள்பட, தேநீர் தயாரிக்கிற, உ... மேலும் பார்க்க