செய்திகள் :

ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாமி வீட்டில் பரபரப்பு

post image

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு இருக்கும் திண்டுக்கல் துரைராஜ் நகரில் காலை 7.30 மணி முதலே அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே போல, சீலப்பாடியில் உள்ள அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் வீடு, வள்ளலார் தெருவிலுள்ள மகள் இந்திராணி வீடு, மற்றும் வத்தகலகுண்டு சாலையில் உள்ள ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான அலமேலு இருளப்பா மில்கள் போன்ற 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பெரியசாமியின் இல்லம்
அமைச்சர் பெரியசாமியின் இல்லம்

அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டின் முன்பு 100-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கூடியிருக்கின்றனர். அதே போல வள்ளலார் தெருவிலுள்ள உள்ள பெரியசாமியின் மகள் இந்திராணி வீடு முன்பும் பெண்கள் நாற்காலிகள் போட்டு அமர்ந்திருக்கின்றனர். 11 மணி அளவில் அமைச்சர் பெரியசாமியின் வீட்டிற்குக் கூடுதலாக சிஆர்பிஎப் வீரர்களும் வந்திருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" - OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்... மேலும் பார்க்க

`மும்பை மாநகராட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி அமைத்து போட்டி’ - உத்தவ் கட்சி

மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் இத்தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 75 வயது; ஓய்வு பெறுவதில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்ஸை தாஜா செய்தாரா மோடி? - காங்கிரஸ்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். மோடியின் உரை அந்த உரையின் இடையில், அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்தும் பேசி... மேலும் பார்க்க

GST: `தீபாவளிப் பரிசு என மோடி கூறியுள்ளது தவறை ஒப்புக் கொள்வதற்கு சமம்!' - மாணிக்கம் தாகூர்

``சுதந்திரப் போராட்டத்தில் எந்த விதத்திலும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ்-ஐ சுதந்திர தின விழாவில் பெருமைப்படுத்தி பிரதமர் மோடி பேசியது நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது” என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடு... மேலும் பார்க்க