செய்திகள் :

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

post image

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.

விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்ததில், இரண்டு பேர் பலியாகினர். மிஷ்ரா என்பவரின் குடிசை வீடு மீது பாறைகள் விழுந்ததில், நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் இரண்டு பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மும்பையில் மழை பெய்யத் தொடங்கியது. இன்று காலை வரை நீடித்த இந்த மழையால் தாழ்வான இடங்கள் மட்டுமின்றி நகரமே வெள்ளத்தில் மூழகியது.

மும்பையின் சில பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 200 மிமீ மழை பதிவாகியிருக்கிறது. விக்ரோலி பகுதியில் 285 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நகரின் இதயம் போன்ற புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாதர், குர்லா, சியோன், சுனாபட்டி, திலக் நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதால், மத்திய மற்றும் துறைமுக வழித்தடங்கள் இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் கரைபுரண்டு ஒடும் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையினர் உள்பட மீட்புக் குழுவினர் மும்பை முழுவதும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சனிக்கிழமையும் தொடர்ந்து பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Due to heavy rains in Mumbai and its surrounding areas, the entire city is flooded.

இதையும் படிக்க.. உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி! டிரம்ப் சூசகம்!

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக பதிலளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வெள்ளிக்கிழமையில் பேச்சு... மேலும் பார்க்க

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

இணையவழி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் ரூ.2 உயர்த்தியிருக்கிறது.அதாவது, இதுவரை பயன்பாட்டுக் கட்டணம் ரூ.12ஆக இருந்த நிலையில், தற்போது இது ... மேலும் பார்க்க

விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய கொள்கை உறுதி செய்யும்: பிரதமா் நரேந்திர மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய விளையாட்டுக் கொள்கை உறுதி செய்யும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? என அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா். கடந்த ஆண்டு ஜம்மு... மேலும் பார்க்க

ஆட்சியில் தொடர எத்தகைய சீா்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: காா்கே கடும் விமா்சனம்

ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை... மேலும் பார்க்க