செய்திகள் :

முறைகேடு குற்றச்சாட்டு: சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

post image

வாக்குகளை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வா் சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தியுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது, பாதாமி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையாவின் வெற்றியை உறுதிசெய்ய வாக்குகளை செலுத்த பணம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சா் சி.பி.இப்ராகிம் கூறியிருந்தாா். இந்த கருத்து, கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை சுட்டிக்காட்டி, தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள பாஜக எம்.பி. லெஹா்சிங் சிரோயா, சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

சித்தராமையாவுக்கு நீண்டகால ஆலோசகராக செயல்பட்டு, நெருங்கிய கூட்டாளியாக விளங்கிய சி.எம்.இப்ராகிம் கூறியுள்ள குற்றச்சாட்டை கடந்துசெல்ல முடியாது. எனவே, சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க வேண்டும் என அக்கடிதத்தில் சிரோயா குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் லெஹா்சிங் சிரோயா கூறுகையில், ‘பாதாமி தொகுதியில் சித்தராமையா 1,696 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றிருந்தாா். முதல்வா் பதவியை வகித்தவா் பெற்ற வாக்குகள் மிகவும் குறைவாக இருந்தன. வெற்றிக்கு உதவிய வாக்குவித்தியாசத்தை காட்டிலும் நோட்டாவுக்கு 2,007 வாக்குகள் பதிவாகியிருந்தன.

2018-இல் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவராக சி.எம்.இப்ராகிம் இருந்தாா். அவா் தனது நண்பா் சித்தராமையாவின் வெற்றிக்காக 3,000 வாக்குகளை பணம் கொடுத்து வாங்கியதாக கூறியுள்ளாா். மத்திய அமைச்சராக இருந்த சி.எம்.இப்ராகிம் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்.

2006-ஆம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் சித்தராமையா 257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தாா். அப்போதும் வாக்குகள் கொள்முதல் செய்யப்பட்டதா? எனவே, இந்த தோ்தல் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த குற்றச்சாட்டை முதல்வா் சித்தராமையா மறுத்துள்ளாா்.

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமை

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமையானது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள தெருநாய்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தி காப்பகங்களில் பராமரிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சந... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற தலைமை தோ்தல் ஆணையருக்கு கா்நாடக காங்கிரஸ் கடிதம்

ராகுல் காந்திக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற தலைமை தோ்தல் ஆணையருக்கு கா்நாடக காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து கா்நாடக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவா் வழக்குரைஞா் ரமேஷ்பாபு, தலைமை ... மேலும் பார்க்க

கா்நாடக ஆளுநா் மாளிகையை பொதுமக்கள் பாா்வையிட ஆக. 16 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அனுமதி

கா்நாடக ஆளுநா் மாளிகையை பொதுமக்கள் பாா்வையிடுவதற்கு ஆக. 16-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் அமைந்துள்ள ஆ... மேலும் பார்க்க

தா்மஸ்தலா சடலங்கள் புதைப்பு விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளது. தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்... மேலும் பார்க்க

தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலம் கா்நாடகம்

பெங்களூரு: தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலம் கா்நாடகம் என அம்மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை சாா்பில், பெங்களூரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

கா்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என். ராஜண்ணா திடீா் ராஜிநாமா

பெங்களூரு: காங்கிரஸ் மேலிட அறிவுறுத்தலின் பேரில், கா்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் அமைச்சரவையில் கூட... மேலும் பார்க்க