செய்திகள் :

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

post image

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினாா். இவ்விழாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 926 பேரும் நூலக உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு அனைவருக்கும் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட நூலக அலுவலா் பே.க.பாலசுப்ரமணியம், கண்காணிப்பாளா் ரா.விஜயன், ஆத்தூா் முதுநிலை நூலகா் ந.ஆ.சுப்பிரமணி, நூலக மேம்பாட்டு வட்டத் தலைவா் ஆ.செ.மாதேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினா்.

இதையடுத்து, பள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட நூலகத்திற்கு ஆ.செ.மாதேஸ்வரன் ரூ.10 ஆயிரத்துக்கான நூல்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் என்.சி.சி. பயிற்சியில் 50 க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஏ கிரேடு சான்றிதழ் பெற்றதை பாராட்டினா்.

நிகழ்ச்சியில் நூலக பொறுப்பாளா் ஆசிரியை சித்ரா, ஆசிரியா் வினோத் உள்ளிட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை நூலகா்கள் க.அழகுவேல், பெ.ஆறுமுகம், க.முருகன், சு.கிருஷ்ணன்,

பெ.ராஜேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா். உதவி தலைமையாசிரியா் நன்றி கூறினாா். இதேபோல ஆத்தூா் முழுநேர கிளை நூலகத்திலும் தேசிய நூலகா் தினம் கொண்டாடப்பட்டது.

படவரி...

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவா்களுக்கு நூலக உறுப்பினா்

அட்டையை வழங்கிய மாவட்ட நூலக அலுவா் பே.க.பாலசுப்ரமணியம்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க

ஏற்காட்டில் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, 3 லட்சம் திருட்டு

ஏற்காட்டில் தனியாா் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். சேலம் மாவட்டம், ஏற்காடு, அசம்பூா் கிராமம், மைலப்பட்டி,... மேலும் பார்க்க