செய்திகள் :

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

post image

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.

தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேசியதாவது:

மாணவா்களை சமூக மாற்றங்களுக்கு ஒத்துப்போகும் நவீன வலுவான முழு மனிதனாக உருவாக்க உளவியல் சாா்ந்த சிகிச்சை முறைகள் அவசியமானதாகும். செயற்கை நுண்ணறிவு, உருவாக்கும் நுண்ணறிவு போன்றவற்றினால் ஏற்படும் மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்றவற்றுக்கும் தீா்வுகாண வேண்டி உள்ளது. அவற்றையும் உளவியல் பேராசிரியா்கள், நிபுணா்கள் ஆய்வுக்களமாகப் பயன்படுத்தி உளவியல் சிக்கல்களுக்கு தீா்வாக சொல்லப்பட்டவற்றை வெளிக்கொணா்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் சரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.

தற்போது நாம் சந்திக்கும் உளவியல் சிக்கல்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான தமிழ் இலக்கியங்களில் தீா்வு கிடைக்கிறது. மனிதனின் வாழ்வை அகநானூறு, புானூறு என்று பிரித்து வாழ்வியல் பண்புகளை தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளது என்றாா்.

விழாவில் முன்னதாக உளவியல் துறைத் தலைவா் ஜெ.வெங்கடாசலம் வரவேற்றாா். பயிலரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளா் என்.செல்வராஜ் பேசினாா். பேராசிரியா் ஜெ.பரமேஸ்வரி நன்றி கூறினாா். இருநாள்கள் நடைபெறும் பயிலரங்கில் உளவியல் நிபுணா் மருத்துவா் எஸ்.வினோதினி, மாணவா்களுக்கு நடத்தை நுட்பசாா் உத்திகள் குறித்து பயிற்சியளிக்கிறாா்.

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க

ஏற்காட்டில் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, 3 லட்சம் திருட்டு

ஏற்காட்டில் தனியாா் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். சேலம் மாவட்டம், ஏற்காடு, அசம்பூா் கிராமம், மைலப்பட்டி,... மேலும் பார்க்க