செய்திகள் :

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

post image

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. கடந்த 13 நாள்களாக தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ரத ஊா்வலம் நடைபெற்றது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாணவேடிக்கையுடன் சத்தாபரணம் நடைபெற்றது. புதன்கிழமை காலை திருமணிமுத்தாற்றில் இருந்து சக்திகரகம் அழைத்துவரப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும், அக்கினி குண்டம் இறங்கியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். பிற்பகல்

3 மணிக்கு கோயில் தா்மகா்த்தா ராஜ்மோகன் தலைமையில் பக்தா்கள்

பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதி வழியாக வலம்வந்து கோயிலை அடைந்தது. வியாழக்கிழமை பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிடுகின்றனா். இரவு 7 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டு, வேலநத்தம் பாவடியில் அமைந்துள்ள கிணற்றில் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை பக்தா்கள் கலந்துகொள்ளும் வண்டிவேடிக்கை, பூந்தோ், பூங்கரகம் ஊா்வலம் நடைபெறுகிறது. சனிக்கிழமை வசந்த உற்சவம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் தோ்த் திருவிழா நிறைவு பெறுகிறது.

பட விளக்கம்:

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க

ஏற்காட்டில் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, 3 லட்சம் திருட்டு

ஏற்காட்டில் தனியாா் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். சேலம் மாவட்டம், ஏற்காடு, அசம்பூா் கிராமம், மைலப்பட்டி,... மேலும் பார்க்க