செய்திகள் :

மினிமம் பேலன்ஸ் ரூ. 50,000: அறிவிப்பை திரும்பப் பெற்றது ஐசிஐசிஐ!

post image

ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 50,000 ஆக உயர்த்திய அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெரு நகரங்களில், ஆகஸ்ட் 1 முதல் வங்கிக் கணக்குத் தொடங்கும் புதிய வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு சராசரி என்பதை ரூ.50,000 ஆக வைத்திருக்க வேண்டும் என்று மாற்றியிருந்தது. முன்பு ரூ.10,000 ஆக இருந்தது.

இதேபோல், புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் கணக்குத் தொடங்குவோருக்கான இருப்புத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரு.25,000 ஆகவும், கிராமப் பகுதிகளில் ரூ. 2,500-ல் இருந்து ரூ. 10,000 ஆகவும் நிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும், சாமானிய மக்களுக்கான வங்கி என்ற நிலையிலிருந்து தடம்மாறுவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது.

இந்த நிலையில், தனது முந்தைய அறிவிப்பை திரும்பப் பெற்ற ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம், புதிய மினிமம் பேலன்ஸை அறிவித்துள்ளது.

அதன்படி, நகரப் பகுதிகளுக்கு ரூ. 15,000, புறநகர்ப் பகுதிகளுக்கு ரூ. 7,500 மற்றும் கிராமப் பகுதிகளுக்கு ரூ. 2,500 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICICI Bank has withdrawn its announcement that it had increased the minimum balance requirement for its customers to Rs. 50,000.

இதையும் படிக்க : அம்பானி குடும்ப சொத்து மதிப்பு ரூ.28,00,000 கோடி! அதானி குடும்பத்தைவிட 2 மடங்கு அதிகம்

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு வரவிருந்த ஆலையை குஜராத்துக்கு திருப்பிய மோடி அரசு! காங்கிரஸ்

தமிழகத்துக்கு வரவிருந்த தொழிற்சாலையை மத்திய அரசு குஜராத்துக்கு திருப்பிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ.... மேலும் பார்க்க

ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டம் நாளைமுதல் (ஆக.15) அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் உள்ள தேசிய... மேலும் பார்க்க

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியி... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்

வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தியா சற்று பிடிவாதமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசண்ட் தெரிவித்தாா். ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் பேட்டியளித்தபோது, அக்டோபா் மாதத்துக்குள் அனைத்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா்களை ராணுவ வீரா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக ராணுவ ... மேலும் பார்க்க