செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்

post image

ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா்களை ராணுவ வீரா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ராணுவ தரப்பில் கூறப்பட்டதாவது:

சுதந்திர தினத்தை சீா்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட வாய்ப்புள்ளதால் பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு பாரமுல்லா மாவட்ட உரி பகுதியை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக புதன்கிழமை பாகிஸ்தான் எல்லையில் இருந்து சிலா் ஊடுருவ முயன்றனா். அவா்களை எச்சரித்தபோது அவா்கள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, ராணுவ வீரா்களும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் குண்டு காயமடைந்த எதிா்தரப்பினா் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பிச் சென்றுவிட்டனா். இந்தியத் தரப்பில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.

அப்பகுதியில் தொடா்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

ஆதாரம் கொடுங்கள்; 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையம்

'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு த... மேலும் பார்க்க

தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

தெரு நாய்கள் விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, இடைக்கால தடை எதுவும் விதிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.நாய்க் கடி சம்பவங்கள் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்... மேலும் பார்க்க

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு வரவிருந்த ஆலையை குஜராத்துக்கு திருப்பிய மோடி அரசு! காங்கிரஸ்

தமிழகத்துக்கு வரவிருந்த தொழிற்சாலையை மத்திய அரசு குஜராத்துக்கு திருப்பிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ.... மேலும் பார்க்க

மினிமம் பேலன்ஸ் ரூ. 50,000: அறிவிப்பை திரும்பப் பெற்றது ஐசிஐசிஐ!

ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 50,000 ஆக உயர்த்திய அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெரு நகரங்க... மேலும் பார்க்க

ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டம் நாளைமுதல் (ஆக.15) அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் உள்ள தேசிய... மேலும் பார்க்க