செய்திகள் :

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையை ஏற்படுத்தும்: ராமதாஸ்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

மயிலாடுதுறை மாவட்டம், பூம்பூகாரில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்ற மகளிர் மாநாடு மகளிர் பெருவிழாவாக சிறப்பு நடந்து முடிந்திருக்கிறது. இதுபோன்ற மகளிர் மாநாட்டை யாராலும் நடத்த முடியாது.

விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவை யாராலும் நடத்த முடியாத பொதுக்குழுவாக அது அமையும். இந்த சிறப்பு பொதுக்குழு பாமகவுக்கு திருப்புமுனையாக அமையும் என்றார்.

மேலும், சென்னை திருமங்கலம் அண்ணாநகரில் சிறுமியிடம் தகாத முறையில் ஒன்றுக்கு மேற்பட்டோர் தகாத முறையில் ஈடுபட முயன்றதாக வெளியான செய்தி அறிந்து துடித்து போனேன். குற்றவாளிகள் சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட மேதை அம்பேத்கர் உரைகள் குறித்த 17 தொகுப்புகளை தமிழக அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் வெளியிட்டு இருப்பது சிறப்புக்குரியது. அம்பேத்கர் குறித்த நூல்களை இன்னும் முழுமையான அளவில் தமிழக அரசு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 49 பேரையும், அவர்களின் 9 மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து மீட்க மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

தமிழகத்தில் மாநில அரசின் கீழ் உள்ள மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறவழிச் சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இது மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றார் ராமதாஸ்.

வங்கியில் வேலை வேண்டுமா..?: பரோடா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

PMK founder Ramadoss said that the special general body meeting to be held on August 17 in Pattanur, Villupuram district, will be a turning point.

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?: தவெக தலைவர் விஜய் கண்டனம்

தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது!

ரிப்பன் மாளிகை அருகே 13 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு தவெக, விசிக கட்சி தலைவர்கள் கண... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில்... மேலும் பார்க்க

மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா

சென்னை: நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல வேண்டும்; மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகரா... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: தந்தை, மகனுக்கு 13 நாள் சிறை!

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளான சுர்ஜித், அவரது தந்தை சிறப்பு உதவி ஆய்வாளர் சர... மேலும் பார்க்க

வாக்குத்திருட்டு,சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைகளுக்கு திமுக கண்டனம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலா்கள் கூட்டத்தில் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள “வாக்குத் திருட்டு” மற்ற... மேலும் பார்க்க