செய்திகள் :

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

post image

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் வைக்கப்பட்டு 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டது. பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் பாட, வாண வேடிக்கையுடன் 5.17 மணிக்கு கோயில் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புகட்டிய சிவகுகநாதன் பட்டர் கொடியேற்றினார்.

பின்னர், கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேதகபாராயணமும், கோயில் ஓதுவார்கள் திருமுறைப் பாராயணமும் பாடினர்.

இதில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குலி ரமேஷ், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

The Aavani festival at the Arulmigu Subramania Swamy Temple in Tiruchendur began with the flag hoisting on Thursday. Thousands of people participated in it.

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?: தவெக தலைவர் விஜய் கண்டனம்

தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது!

ரிப்பன் மாளிகை அருகே 13 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு தவெக, விசிக கட்சி தலைவர்கள் கண... மேலும் பார்க்க

மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா

சென்னை: நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல வேண்டும்; மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகரா... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: தந்தை, மகனுக்கு 13 நாள் சிறை!

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளான சுர்ஜித், அவரது தந்தை சிறப்பு உதவி ஆய்வாளர் சர... மேலும் பார்க்க

வாக்குத்திருட்டு,சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைகளுக்கு திமுக கண்டனம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலா்கள் கூட்டத்தில் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள “வாக்குத் திருட்டு” மற்ற... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும... மேலும் பார்க்க