செய்திகள் :

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்னி அரசு கண்டனம்

post image

நிரந்தரப் பணி, தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் திட்டம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாள்களாகப் ரிப்பன் மாளிகைக்கு எதிரே போராட்டம் செய்து வந்தனர்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவல்துறை அவர்களை கலைந்துப்போகக் கூறியது. ஆனால், எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நேற்று இரவு காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

வன்னி அரசு - VCK
வன்னி அரசு - VCK

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாள்களாக அறவழியில் போராடி வந்தனர்.

அவர்களது கோரிக்கை நியாயமானது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார். இடது சாரி கட்சித்தலைவர்களுடன் முதல்வரை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

இச்சூழலில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை. போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி, வழக்கறிஞர் நிலவுமொழி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். காவல்துறையின் இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடும் தூய்மை பணியாளர்கள்
ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடும் தூய்மை பணியாளர்கள்

சனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும். நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``எந்த உதவிகளும் கிடைக்காமல் அடைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?'' -விஜய் கடும் கண்டனம்

அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். தனியார்மயமாக்கலை எதிர்த்தும்... மேலும் பார்க்க

`எங்க வயித்துல அடிக்கிறீங்களே' - Sanitary Workers Protest | நள்ளிரவில் என்ன நடந்தது? | Spot Report

சென்னை ரிப்பன் மாளிகையில் 13 நாள்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்திருக்கின்றனர். போராடிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களை கண்... மேலும் பார்க்க

Doctor Vikatan: 60 வயது கணவருக்கு ரத்தக்குழாய் அடைப்பு, 20 வயது மகனுக்கும் டெஸ்ட் அவசியமா?

Doctor Vikatan: என் கணவருக்கு 60 வயதாகிறது. வருடாந்தர ஹெல்த் செக்கப் செய்வது வழக்கம். அப்படி அவருக்கு டிரெட்மில் டெஸ்ட் செய்தபோது சந்தேகம் வந்ததால், ஆஞ்சியோ செய்தோம். அதில் 2 அடைப்புகள் இருப்பதாகச் சொ... மேலும் பார்க்க

Biscuits: பிஸ்கட் நல்ல ஸ்நாக்ஸா? - நிபுணர் விளக்கம்

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்குவரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது. பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இரு... மேலும் பார்க்க

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமானங்கள்; அரசியல் உறவுகளில் மாற்றம்?

இந்தியா மற்றும் சீனா அரசியல் விரிசல்களை சரிசெய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கின்றன. இதன் விளைவாக அடுத்தமாதமே இரு நாட்டுக்கும் இடையில் நேரடியான விமானப்போக்குவரத்து தொடங்கப்படலாம் என ப்ளூம்பெர்க் தள... மேலும் பார்க்க