செய்திகள் :

சுதந்திர தினம்: தஞ்சை பெரிய கோயிலில் தீவிர சோதனை

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சையில் பெரிய கோவில், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

நாட்டின் 79வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு பாரம்பரிய சின்னங்கள் மற்றும் நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு - மக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோவிலில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு உள்ளே நுழையும் ராஜராஜன் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் மற்றும் பாதுகாப்பு கருவி மூலம் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இந்த சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின்! முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி நாளை(ஆக. 15) சென்னை மெட்ரோ ரயில் சேவை மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்... மேலும் பார்க்க

ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் கொட்டையூர் மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினார்.அதிமுக ஆட்சி அமை... மேலும் பார்க்க

சிகிச்சை, காப்பீடு, வீடு, உணவு... தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள்- தங்கம் தென்னரசு

தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீடு, உணவு, வீடு, பிள்ளைகளுக்குக் கல்வி, தொழில் உதவி என பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் கைது: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

சென்னையில் தூய்மைப் பணியாளர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வியாழக்கிழமை முறையிடப்பட்டது.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா... மேலும் பார்க்க

அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் ந... மேலும் பார்க்க