செய்திகள் :

தூய்மைப் பணியாளர்கள் கைது: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

post image

சென்னையில் தூய்மைப் பணியாளர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வியாழக்கிழமை முறையிடப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே 13 நாள்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இதனிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு அனைவரையும் வலுகட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து, பல்வேறு சமூதாய கூடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள் கைதை எதிர்த்தும் மாற்று இடம் ஒதுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.

அப்போது, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களையும் சட்ட கல்லூரி மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ”தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்த தடையுமில்லை. அனுமதியோடு போராட்டம் நடத்தி காவல்துறை தடுத்தால் தலையிட முடியும். தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெறவில்லை எனத் தெரிவித்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், வழக்கறிஞர்கள் கைது குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

An appeal was filed before the Chief Justice of the High Court on Thursday against the arrest of a sanitation worker in Chennai.

இதையும் படிக்க : தமிழகத்துக்கு வரவிருந்த ஆலையை குஜராத்துக்கு திருப்பிய மோடி அரசு! காங்கிரஸ்

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளார்.சுதந்திர நாளையொட்டி, தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரச... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு ... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஞாயிறு அட்டவணைப்படி நாளை(ஆக. 15) சென்னை புறநகர், மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் நாளை(ஆக. 15) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை(ஆக. 15) சுதந்திர நாள் கொண்டாடப்படுவதையொட்டி அரசு விடுமுறை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நில... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு காவல் துறை அறிவுரை!

தொடர் விடுமுறை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர் செல்வோர் மாற்று வழிகளையும் பயன்படுத்துமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளை(ஆக. 15) முதல் 17ஆம... மேலும் பார்க்க