செய்திகள் :

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டு! அது முகவரியே அல்ல; காங்கிரஸ் அதிரடி

post image

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டுப் புகாரில், அது முகவரியே அல்ல, ஒரு பகுதியின் பெயர். பாஜகவின் பொய், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், சௌந்தேரி என்ற ஒரு முகவரியில் 4,000 பேர் வாழ்வதாக பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், வண்டூர், எர்ணாடு, கல்பெட்டா உள்ளிட்ட பேரவைத் தொகுதிகளில் கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ஒரே முகவரியில் 4,000 பேர் வாழ்வதாக பாஜக வெளிப்படுத்திய 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது, சௌந்தேரி என்ற முகவரியில் 4000 பேர் வாழவில்லை. 'சௌந்தேரி' என்பது ஒரு வீட்டு முகவரியே அல்ல, கேரளத்தின் ஒரு பகுதி. அந்தப் பகுதியில் 4000 வாக்காளர்கள் உள்ளனர் என்று கள நிலவங்களை மேற்கோள்காட்டி காங்கிரஸ் பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக, கேரளத்தில் பல்வேறு ஊடகங்களும் சௌந்தேரி பகுதியில் நேரடியாகச் சென்று மக்களிடம் எழுப்பிய கேள்விகளும் அவர்கள் அளித்த பதில்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாஜகவினர் எவ்வாறு மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு, நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைத்திருந்தார்.

கர்நாடக மாநிலத்தில் ஒரே தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாஜக, வயநாடு தொகுதி குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்ப அது உண்மையில்லை என்று காங்கிரஸ் விளக்கம் கொடுத்துள்ளது.

In the Wayanad vote rigging complaint made by the BJP, it is not an address, but the name of an area. The Congress has stated that the BJP's lie has come to light.

இதையும் படிக்க.. பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்த... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பில் 2 சிஐஎஸ்எஃப் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் ... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரிவிதிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை! ஏன்?

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்... மேலும் பார்க்க

இந்த ஆதாரமே பொய்! - சோனியா காந்தியின் வாக்குரிமை பற்றி காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்குரிமை பெற்றதாக பாஜக கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப... மேலும் பார்க்க