செய்திகள் :

நான்காண்டு ஆட்சி! ஆப்கன் தலைநகரில் மலர்மழை பொழியும் தலிபான்கள்!

post image

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் 4-ம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் காபுலில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் நிறைவடைந்து, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, அமெரிக்க படைகள் வெளியேறின. அன்று முதல், அந்நாட்டில் தலிபான்கள் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகின்றது.

இதையடுத்து, நிகழாண்டுடன் (2025) தலிபான்களின் ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக நாளை (ஆக.15) அந்நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், பாதுகாப்புத் துறையின் ஹெலிகாப்டர்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், அந்நகரத்தின் மீது வண்ணங்கள் நிறைந்த பூக்கள் தூவப்படும் என்றும், தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஹபீப் கொஃப்ரான் அறிவித்துள்ளார்.

இத்துடன், காபுல் நகரம் முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான தலிபான்களின் கொடிகள் இன்று (ஆக.14) பறக்கவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஈடுபட பெண்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், நாளை நடைபெறும் கொண்டாட்டங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் தற்போது தங்களது தாயகத்துக்குத் திரும்பி வருகின்றனர்.

ஏற்கனவே, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசு, சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

It has been announced that helicopters will be used to shower flowers in the capital Kabul to mark the 4th anniversary of the Taliban's rule in Afghanistan.

பிரிட்டன் பிரதமருடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!

பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இடையில் நாளை (ஆ... மேலும் பார்க்க

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதை எளிதாக்குவதற்காக, அந்நாட்டு அரசு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் தீவிர நடவடிக்கையில்... மேலும் பார்க்க

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது... மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல் அமைச்சர்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் சர்ச்சை மிகுந்த பகுதியில், சுமார் 3,401 வீடுகளைக் கட்டுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளது.சர்வதேச அளவில் வந்த எதிர்ப்புகளினால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் ஈ1... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படை உருவாக்கம்!

பாகிஸ்தான் ராணுவத்தில், புதியதாக ராக்கெட் படை உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் 79-வது சுதந்திர நாள் இன்று (ஆக.14) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சுதந்திர நாள்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் மூவர் பலி; 64 பேர் காயம்!

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியதில், 8 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர்.மேலும், குண்டு பாய்ந்ததில் காயமடைந்த 60 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சீக்கிய முதியவா் மீது இனவெறித் தாக்குதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சீக்கிய முதியவா் ஹா்பால் சிங் (70) மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது தலையில் எலும்புகள் உடைந்தன. இதையடுத்து அவா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.... மேலும் பார்க்க