செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர்! - குடியரசுத் தலைவர்

post image

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “நாட்டைப் பாதுகாக்கும் போது, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்றுச் சான்றாக நினைவுகூரப்படும்.

ஏப்ரல் மாதம் பஹல்காமில் அப்பாவி குடிமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது. இது முற்றிலும் மனிதாபிமானமற்றது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது.

நாங்கள் யாருடைய இடத்தையும் ஆக்கிரமிக்க மாட்டோம். ஆனால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்காக பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம். நம்மைப் பிரிக்க விரும்புபவர்களுக்கு சரியான பதிலடி இது” எனத் தெரிவித்தார்.

Op Sindoor historic example in fight against terror: President in I-Day speech

இதையும் படிக்க : டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

சுதந்திர நாளில் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு - காஷ்மீர்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோருக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளனர்.இந்தியாவின் 79-வது சுதந்திர த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்கள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சத்தீஸ்கரில், தண்டகாரன்யா சிறப்பு மண்டல ஆணையத்தின் உறுப்பின... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்த... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பில் 2 சிஐஎஸ்எஃப் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் ... மேலும் பார்க்க