செய்திகள் :

சத்தீஸ்கரில்.. ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்கள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில், தண்டகாரன்யா சிறப்பு மண்டல ஆணையத்தின் உறுப்பினரான விஜய் ரெட்டி என்பவரை ரூ.90 லட்சம் வெகுமதியும் மற்றும் ராஜ்நந்த்காவோன் - கான்கர் எல்லைப் பிரிவின் செயலாளர் லோகேஷ் சலாமே என்பவரை ரூ.26 லட்சம் வெகுமதியும் அறிவித்து அரசுப் படைகள் தேடி வந்தன.

இந்நிலையில், மொஹ்லா-மன்பூர்-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் வனப்பகுதியில், மாநில காவல் துறை, மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் நேற்று (ஆக.13) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்களான விஜய் ரெட்டி மற்றும் லோகேஷ் சலாமே ஆகியோர் சுட்டுக்கொல்லட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட விஜய் ரெட்டியை 4 மாநில காவல் துறையினர் தேடி வந்ததாகவும், அதற்காக சத்தீஸ்கர் காவல் துறையினர் ரூ.25 லட்சமும், மகாராஷ்டிர காவல் துறையினர் ரூ.25 லட்சமும், தெலங்கானா காவல் துறையினர் ரூ.20 லட்சமும் ஆந்திர காவல் துறையினர் ரூ.20 லட்சமும் வெகுமதிகளாக அறிவித்திருந்ததாகக் கூறியுள்ளனர்.

இதேபோல், லோகேஷ் சலாமியை பிடிக்க, சத்தீஸ்கர் காவல் துறை ரூ.10 லட்சமும், மகாராஷ்டிர காவல் துறை ரூ.16 லட்சமும் வெகுமதிகளாக அறிவித்திருந்தது தெரியவந்துள்ளன.

இத்துடன், அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு! 167 பேர் மீட்பு!

In Chhattisgarh, two Naxalites who were wanted with a combined reward of Rs 1.16 crore have been shot dead by security forces.

சுதந்திர நாளில் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு - காஷ்மீர்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோருக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளனர்.இந்தியாவின் 79-வது சுதந்திர த... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர்! - குடியரசுத் தலைவர்

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்த... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பில் 2 சிஐஎஸ்எஃப் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் ... மேலும் பார்க்க