செய்திகள் :

சுதந்திர நாளில் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு - காஷ்மீர்!

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோருக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு சேவைகள், ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளுக்கான விருது பெறுபவர்களின் அதிகாரபூர்வ பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த விருதுகளில் வீரதீர விருதுகள், சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கம் ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டு, மொத்தம் 1,090 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதில், 152 பேர் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் வடகிழக்கைச் சேர்ந்தவர்கள்.

233 பேருக்கு வீரதீர விருதும், 99 பேருக்கு சிறப்பு சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்கள், 758 பேருக்கு சிறப்பாக சேவையாற்றியதற்கான பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது.

காவல்துறை பிரிவில் 226 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 89 பேருக்கு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்களும், 635 பேருக்கு சிறப்பான சேவைக்கான பதக்கமும் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பட்டியலில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளனர்.

தீயணைப்பு வீரர்களுக்கு 62 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 வீரதீரப் பதக்கங்கள், 5 குடியரசுத் தலைவரின் சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் மற்றும் 51 சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் அடங்கும்.

ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்புப் பிரிவில், ஒரு வீரதீரப் பதக்கம், சிறப்புமிக்க சேவைக்கான மூன்று குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் மற்றும் சிறப்பான சேவைக்கான 41 பதக்கங்கள் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

Over 1,000 To Receive Gallantry Awards On 15 August, Jammu And Kashmir Gets Most

இதையும் படிக்க : பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர்! - குடியரசுத் தலைவர்

சத்தீஸ்கரில்.. ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்கள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சத்தீஸ்கரில், தண்டகாரன்யா சிறப்பு மண்டல ஆணையத்தின் உறுப்பின... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர்! - குடியரசுத் தலைவர்

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்த... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பில் 2 சிஐஎஸ்எஃப் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் ... மேலும் பார்க்க