செய்திகள் :

J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அச்சம்!

post image

ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புள்ளாகி இருக்கின்றனர்.

உத்தரகாண்ட் வெள்ளம்
உத்தரகாண்ட் வெள்ளம்

அதேபோல கடந்த வாரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருந்தனர்.

ஜம்மு & காஷ்மீரின் ஜோசிதி கிஷ்த்வாரில் மேக வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

மாநில பேரிடர் மேலாண்மை படை, தேசிய பேரிடர் மேலாண்மை படை, காவல்துறை ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்டது மேக வெடிப்பா? - உண்மை என்ன? - விளக்கும் பிரதீப் ஜான்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

உத்தரகாண்ட் வெள்ளம்: 'பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்'- பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகுத... மேலும் பார்க்க

Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்; 10-க்கும் மேற்பட்டோர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகு... மேலும் பார்க்க

இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்து, பாேலீஸ் பாதுகாப்பு, வருவாய் அலுவலர் தந்த பாஸ் - சோக காட்சிகள்

கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி வயநாட்டின் சூரல்மலை பகுதியில் வரலாறு காணாத ஊருள்பொட்டல் - நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை என மூன்று கிராமங்கள் இயற்கையின் கோரத்திற்கு இறையாக... மேலும் பார்க்க

Tsunami: 20 லட்சம் பேர் வெளியேற்றம்; போர் கால நடவடிக்கைகள் - திகில் இரவை எதிர்கொள்ளும் ஜப்பான்!

ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்துக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், சீனா, கொலம்பியா, ஈக்குவேடார் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய... மேலும் பார்க்க

Tsunami: ஜப்பான், ரஷ்யாவில் சுனாமி; உணவு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளின் விளக்கம் என்ன?

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்க... மேலும் பார்க்க