செய்திகள் :

Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்டது மேக வெடிப்பா? - உண்மை என்ன? - விளக்கும் பிரதீப் ஜான்

post image

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. பல வீடுகள், ஹோட்டல்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.

திடீரென வந்த இந்த காட்டாற்று வெள்ளத்திற்கு மேகவெடிப்புதான் காரணம் என்று சில தகவல்களும், மேக வெடிப்பு காரணமில்லை என்று சில தகவல்களும் வெளியாகி இருக்கிறது. உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும், மேகவெடிப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானைத் தொடர்புகொண்டு பேசினோம்.

உத்தரகாண்ட் வெள்ளம்
உத்தரகாண்ட் வெள்ளம்

மேகவெடிப்பு குறித்து பேசிய அவர், “ பொதுவாக மேகவெடிப்பு என்பதற்கு சரியான வரையறை கிடையாது. மேகவெடிப்பு என்பது குறுகிய நேரத்தில் அதிக கனமழை பெய்வதைதான் மேக வெடிப்பு என்று சொல்கிறார்கள். நேற்று(ஆகஸ்ட் 5) உத்தரகாண்டில் எல்லா இடங்களிலும் கனமழை பெய்திருக்கிறது.

குறிப்பாக ஹரித்வாரில் மட்டும் 303 மி.மீ மழை பெய்திருக்கிறது. இரண்டு நாட்களாக அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதனால் உத்தரகாண்டில் நடந்ததை மேக வெடிப்பு என்று சொல்லமுடியாது. 100 மி.மீ க்கு அதிகமாக மழை பெய்தால் அவை மேக வெடிப்பு என்று இந்திய வானிலை ஆய்வு வரையறுத்திருக்கிறது. ஆனால் இதனை உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.

பிரதீப் ஜான்
பிரதீப் ஜான்

உதாரணத்திற்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாதாரணமாகவே 100 மி.மீ க்கு மேல்தான் பெய்யும். தமிழ்நாட்டிலேயே 100 மி.மீ க்கு அதிகமாக மழை எல்லாம் பெய்திருக்கிறது. அதனை எல்லாம் மேகவெடிப்பாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. 2010- லடாக்கில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருந்தார்கள்.

அங்கு ஒரு வருடத்திற்கே 100 மி.மீ மழைதான் பெய்யும். ஆனால் அந்த சமயத்தில் 2 மணிநேரத்தில் 200 மி.மீ மழை பெய்தது. குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்திருக்கிறது. இதுதான் மேகவெடிப்பு. வெள்ளம் வந்தாலே மக்கள் மேகவெடிப்பு என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. 2013-உத்தரகாண்டிலும், 2023-ல் இமாச்சல் பிரதேசத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. மேகவெடிப்பு என்பது அந்த ஊர்களின் காலநிலையை பொறுத்துதான் நிகழும்” என்று விளக்கம் அளித்தார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

உத்தரகாண்ட் வெள்ளம்: 'பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்'- பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகுத... மேலும் பார்க்க

Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்; 10-க்கும் மேற்பட்டோர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகு... மேலும் பார்க்க

இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்து, பாேலீஸ் பாதுகாப்பு, வருவாய் அலுவலர் தந்த பாஸ் - சோக காட்சிகள்

கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி வயநாட்டின் சூரல்மலை பகுதியில் வரலாறு காணாத ஊருள்பொட்டல் - நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை என மூன்று கிராமங்கள் இயற்கையின் கோரத்திற்கு இறையாக... மேலும் பார்க்க

Tsunami: 20 லட்சம் பேர் வெளியேற்றம்; போர் கால நடவடிக்கைகள் - திகில் இரவை எதிர்கொள்ளும் ஜப்பான்!

ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்துக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், சீனா, கொலம்பியா, ஈக்குவேடார் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய... மேலும் பார்க்க

Tsunami: ஜப்பான், ரஷ்யாவில் சுனாமி; உணவு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளின் விளக்கம் என்ன?

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்க... மேலும் பார்க்க

Tsunami: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளைத் தாக்கிய சுனாமி; பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியிருக்கிறது.ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30,... மேலும் பார்க்க