செய்திகள் :

இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்‌ஷன் என்ன?

post image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய பொருள்கள் மீது 25 சதவிகிதம் வரி விதித்தார்.

ஏற்கெனவே, ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களிடம், தங்களின் தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமைக்கக் கூடாது என்று எச்சரித்து வந்த ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அந்நாட்டின் பொருளரத்துக்கும், உக்ரைன் மீதான போருக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு வழங்கி வருவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

அதோடு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாவிட்டால் வரியை மேலும் அதிகரிப்பேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

மறுபக்கம், ஒரு நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யவேண்டும் என்பது அந்நாட்டின் உரிமை, அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறிவந்தார்.

இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை உயர்த்தப்போகிறேன் என்று நேற்று (ஆகஸ்ட் 5) அறிவித்த ட்ரம்ப், சொன்னதைப் போலவே இந்தியா மீதான வரியை இன்று மேலும் 25 சதவிகிதம் உயர்த்தி 50 சதவிகிதமாக விதித்திருக்கிறார்.

அதுவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கிவருவதால் அதற்கு அபராதமாக இந்த 25 சதவிகித வரி உயர்த்தியிருப்பதாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இந்த அபராத வரி அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

இதன்மூலம், பிரேசிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவால் 50 சதவிகித வரிவிதிப்புக்குள்ளான நாடாகியிருக்கிறது இந்தியா.

ட்ரம்பின் இந்த நடவடிக்கையை, `நியாயமற்றது, காரணமற்றது' என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சித்திருக்கிறது.

அதோடு, பல நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச்சம்- பின்னணி என்ன?

பாகிஸ்தானின் சிந்து நதி டெல்டா பகுதி, மக்கள் வாழத் தகுதியான இடமா எனக் கேள்வி எழுப்பும் வகையில் மிகப் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. இதில் இந்தியாவின் பங்கும் உள்ளது.பாகிஸ்தானின் தெற்கில் சிந்து நதி... மேலும் பார்க்க

”பாஜக தலைவரான பிறகும் ஜெயலலிதா தொண்டர் மனநிலையில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன்”-டி.டி.வி.தினகரன்

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.டி.வி.தினகரன்... மேலும் பார்க்க

'தூய்மைப் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுக்க கூட மனசில்ல...' - கொந்தளிக்கும் போராட்டக் குழு!

'பத்திரிகையாளர் சந்திப்பு!'சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஆறாவது நாளை எட்டியிருக்கிறது. இன்றுதான் அரசு சார்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் மே... மேலும் பார்க்க

"அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் SC, ST, சிறுபான்மையினர் ஒருவர் கூட இல்லை" - சு.வெங்கடேசன்

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கி... மேலும் பார்க்க

உ.பி. வெள்ளப் பாதிப்பு: "கங்கை உங்களைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லும்" - பாஜக அமைச்சர் பேச்சு

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், பாதிக்கப்பட்டவர்களிடம் கங்கை நதி உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்று சர்ச்சைக்குரிய வகையில் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "போராடுபவர்களைத் தவறான வழியில் திசை திருப்புகின்றனர்" - சேகர் பாபு

சென்னையில் துப்புரவுப் பணிகள் தனியார் மயமாவதை எதிர்த்து ரிப்பன் மாளிகைக்கு வெளியில் பணியாளர்கள் போராடி வரும் சூழலில், அதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.முறையாகத் தகவல் ... மேலும் பார்க்க