செய்திகள் :

உ.பி. வெள்ளப் பாதிப்பு: "கங்கை உங்களைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லும்" - பாஜக அமைச்சர் பேச்சு

post image

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், பாதிக்கப்பட்டவர்களிடம் கங்கை நதி உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பது எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனங்களைத் தூண்டியிருக்கிறது.

கடந்த சில நாள்களாக கங்கை மற்றும் யமுனா நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் - உத்தரப்பிரதேசம்
பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் - உத்தரப்பிரதேசம்

இந்த நிலையில், அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் கடந்த திங்களன்று கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

அங்குப் பாதிக்கப்பட்டவர்களிடம் சஞ்சய் நிஷாத் பேசும் வீடியோ ஒன்று நேற்றுமுதல் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் சஞ்சய் நிஷாத், "கங்கை புத்திரர்களின் பாதங்களைச் சுத்தம் செய்ய கங்கை நதி உங்களின் வீடு தேடி வந்திருக்கிறது.

இது நேராக உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும்" என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் அமைச்சர் இவ்வாறு கூறியதற்கு சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் சர்வேந்திர பிக்ரம் சிங், "இத்தகைய பேச்சு அமைச்சரின் அக்கறையின்மையைக் காட்டுகிறது.

வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்று அமைச்சர்கள் கூறுவது, கள யதார்த்தத்திலிருந்து அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றது" என்று விமர்சித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச்சம்- பின்னணி என்ன?

பாகிஸ்தானின் சிந்து நதி டெல்டா பகுதி, மக்கள் வாழத் தகுதியான இடமா எனக் கேள்வி எழுப்பும் வகையில் மிகப் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. இதில் இந்தியாவின் பங்கும் உள்ளது.பாகிஸ்தானின் தெற்கில் சிந்து நதி... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்‌ஷன் என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில நா... மேலும் பார்க்க

”பாஜக தலைவரான பிறகும் ஜெயலலிதா தொண்டர் மனநிலையில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன்”-டி.டி.வி.தினகரன்

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.டி.வி.தினகரன்... மேலும் பார்க்க

'தூய்மைப் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுக்க கூட மனசில்ல...' - கொந்தளிக்கும் போராட்டக் குழு!

'பத்திரிகையாளர் சந்திப்பு!'சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஆறாவது நாளை எட்டியிருக்கிறது. இன்றுதான் அரசு சார்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் மே... மேலும் பார்க்க

"அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் SC, ST, சிறுபான்மையினர் ஒருவர் கூட இல்லை" - சு.வெங்கடேசன்

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "போராடுபவர்களைத் தவறான வழியில் திசை திருப்புகின்றனர்" - சேகர் பாபு

சென்னையில் துப்புரவுப் பணிகள் தனியார் மயமாவதை எதிர்த்து ரிப்பன் மாளிகைக்கு வெளியில் பணியாளர்கள் போராடி வரும் சூழலில், அதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.முறையாகத் தகவல் ... மேலும் பார்க்க