செய்திகள் :

கவனக்குறைவாக விளையாடுவது பேஸ்பால் தத்துவமல்ல..! கிரேக் சேப்பல் விமர்சனம்!

post image

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இங்கிலாந்தின் பேஸ்பால் கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியில் வென்று 2-2 எனத் தொடரை சமன்படுத்தியது.

இங்கிலாந்து அணி கடைசி போட்டியில் 301/4 ரன்களிலிருந்து 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. அவர்களது பேஸ்பால் அணுகுமுறை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

இது குறித்து கிரேக் சேப்பல் பேசியதாவது:

கிரிக்கெட்டில் பகுத்துணர்வுமுக்கியம்

இந்தத் தொடரில் இங்கிலாந்தின் முன்மாதிரியாக ஹாரி புரூக் பேட்டிங் இருந்தது. நான் அவரை இதற்கு முன்பாக மிகவும் புகழ்ந்து பேசியுள்ளேன்.

ஹாரி புரூக்கிடம் டைமிங், எங்கு வேண்டுமானாலும் அடிக்கும் ஆற்றல், நம்பிக்கை, எளிதாக பேட்டிங் ஆடும் திறமை இருக்கிறது. ஆனால், கிரிக்கெட்டில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாட் அடிப்பதை விட பகுத்துணர்வு முக்கியமானது.

எப்போது அதிரடியாக ஆட வேண்டும் எப்போது பொறுமையாக ஆட வேண்டுமென தெரிந்திருக்க வேண்டும்.

ஓவலில் புரூக் ஆட்டமிழந்தது சிக்கலுக்கான அறிகுறியாக இருந்தது.

பேஸ்பாலின் தத்துவம் என்ன?

பேஸ்பாலின் தத்துவம் - பயமில்லாத, அதிரடியான கிரிக்கெட் அவர்களது அணுகுமுறையை புத்துயுர்ப்படைய வைத்துள்ளது. ஆனால், அதை கடினமாக விளையாடி அதை சொதப்பக்கூடாது.

இங்கிலாந்து வீரர்களில் ஒருவராவது அவர்களது வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். அழுத்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஹாரி புரூக் பகட்டான ஷாட் அடித்து அதற்கான வெகுமதியைப் பெற்றார்.

நேர்மறையாக விளையாடுவதில் தவறில்லை. ஆனால், அதற்காக கவனக்குறைவாக விளையாடக் கூடாது.

இந்தியா தார்மீக வெற்றி

நம்பிக்கையுடன் திட்டமிடப்பட்டு விளையாட வேண்டும். புரூக் இப்போதுதான் வளர்ந்து வருகிறார். அவர் இதைக் கற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.

போட்டிய வெல்ல வேண்டுமெனில் அவர் இந்த அதிரடியுடன் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். ஜோ ரூட் இடத்தை ஹாரி புரூக் நிரப்ப வேண்டும்.

இருபக்கமும் ஹுரோயிசம் நடந்தது. உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வு ரீதியாக சோதிக்கப்பட்டது. ஆனால், இந்தியா தார்மீக வெற்றி பெற்றது. அவர்கள் தெளிவாக, அடையாளத்துடன் நோக்கத்துடன் வென்றார்கள் என்றார்.

"Positive cricket doesn't mean reckless cricket," said Australian great Greg Chappell, lambasting England's 'Bazball' philosophy during the high-intensity drawn Test series against India.

ஆசியக் கோப்பைக்கு முன் டி20 அணிக்கு திரும்பும் ஷுப்மல் கில்! ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்!

ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து... மேலும் பார்க்க

சிராஜுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

இந்திய வேகப் பந்துவீச்சாளர் வீரர் சிராஜ் ஓவரில் விளையாடுவது எப்போதும் சவால் மிகுந்தது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட... மேலும் பார்க்க

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

ஐசிசியின் ஜூலை மாத விருதுக்கு இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இந்தியா - இங்கிலாந்து இடையேயான ‘ஆண்டர்சன் - டெண்டுல்... மேலும் பார்க்க

கர்மா உங்களை உடனடியாகத் தாக்கும்... ஸ்டோக்ஸை விமர்சித்த அஸ்வின்!

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குறித்து அஸ்வின் “பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியை வென்று 2-2 எனத் தொடரை சமன்படுத்தி... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: டாப் 5-ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்! கேப்டன் கில்லுக்கு சரிவு!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த தரநிலையை இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்து அசத்தியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆண்டர்சன் - டெண்டுல்கர் ... மேலும் பார்க்க

என்னைவிட ஜோ ரூட்டுதான் தொடர் நாயகன் விருதுக்குத் தகுதியானவர்: ஹாரி புரூக்

தொடர் நாயகன் சர்ச்சை குறித்து ஹாரி புரூக், “என்னைவிட ஜோ ரூட்டுக்குத்தான் இது மிகவும் பொருத்தமானது” எனக் கூறியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற ‘ஆண்டா்சன் - டெண்டுல்கா் கோப்பை’ டெஸ்ட் கிரிக்கெட் தொடா், ப... மேலும் பார்க்க