செய்திகள் :

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி

post image

மும்பை: வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புகள் 5.50 சதவிகிதம் மாற்றாமல் நிலையாக வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது, வட்டி விகிதத்தை ஒருமனதாக நிலைநிறுத்தி, நடுநிலையான நிலைப்பாட்டைத் தொடர முடிவு செய்தது. இதனால் வீட்டு மற்றும் வாகன கடன்களின் மாதாந்திர தவணைகள் மாறாமல் நிலையாக இருக்கும்.

உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்து நீடித்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. அதே வேளையில், பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்தாலும், இது பெரும்பாலும் நிலையற்ற உள்ள உணவு விலைகள் காரணமாகும் என்றார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.

ஆர்பிஐ கடந்த மூன்று கூட்டங்களில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பை அமலாக்கம் செய்துள்ள நிலையில், தற்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை.

ஜூன் மாதத்தில் பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் போது தெரியவரும். அதே வேளையில், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 6.5 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிப்பு உயர்த்துவதாக அச்சுறுத்தல்களை விடுத்தும், அதிகரித்தும் வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் அதிகரித்து ரூ.284 கோடியாக உள்ளதாக பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது. சமீபத்திய கட்டண அறிவிப்பு காரணமாக ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து மீண்டு, இன்று 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவடைந்தது. இதற்கு ரிசர்வ் வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் ... மேலும் பார்க்க

அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

பயனர்களுக்காக புதிய திட்டத்தை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரம்பற்ற தொலைத்தொடர்புகளைக் கொண்டிருக்கும் வகையில் ரெட்எக்ஸ் என்ற குடும்ப திட்டத்தை ரூ.1,601 விலையில் அறிமுகம் ச... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த பாதையில் செயல்பட்டதால், முக்கிய வட்டி விகிதங்கள் 'நடுநிலை' நிலைப்பாட்டுடன் மாறாமல் இருந்ததால், இன்றைய வர்த்தகத்தில், தொடர்ந்து இரண்டாவது அமர்விலும் இந்திய குறியீடுகள... மேலும் பார்க்க

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9 ஸ்மார்ட்போனுக்கு ரூ.22 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியினை இணைய விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் பெறலாம். கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன், ஆகஸ்ட் 20 ஆம்... மேலும் பார்க்க

ஆப்பிள் நிறுவனத்தில் கோடிகளில் வேலை வேண்டுமா? சம்பள விவரங்கள் இதோ..!

ஆப்பிள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் வியக்கத்தக்கதாக உள்ளதாக பல்வேறு தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தொழில்நுட்ப உலகில் நாள்தோறும் மாற்றங்கள் நிலவி வரும்நிலையில், நிற... மேலும் பார்க்க