செய்திகள் :

ஆசியக் கோப்பைக்கு முன் டி20 அணிக்கு திரும்பும் ஷுப்மல் கில்! ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்!

post image

ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டது. தொடர் அட்டவணையின் படி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய விளையாடவிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

வங்கதேசத்துக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்களுடன் புதிய தொடர் ஒன்றில் விளையாட கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், இந்திய அணிக்கு அடுத்ததாக எந்தப் போட்டியும் இல்லாததால், நேரடியாய செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவிருக்கிறது.

இந்தத் தொடருக்கான அணி, ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் ஓய்வுபெற்ற நிலையில், இளம் வீரர்கள் பலருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவின் தலைமையில் இந்திய அணி மிக வலிமை வாய்ந்த அணியாகவும் மாறியுள்ளது.

கடந்தாண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஷுப்மன் கில் அதற்கு பின்னர் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், ஒருநாள், டெஸ்ட், ஐபிஎல் என அனைத்து வடிவங்களிலும் ஷுப்மன் கில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்கும் பட்சத்தில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோரின் இடம் கேள்விக் குறியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் 559 ரன்களும், ஷுப்மன் கில் 650 ரன்களும் குவித்திருந்தனர். அதேவேளையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் 759 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் தன்வசமாக்கியிருந்தார்.

தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

Shubman Gill Poised for T20I Return at Asia Cup; Jaiswal, Sudharsan in Contention Amid Selection Crunch

இதையும் படிக்க :ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவனக்குறைவாக விளையாடுவது பேஸ்பால் தத்துவமல்ல..! கிரேக் சேப்பல் விமர்சனம்!

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இங்கிலாந்தின் பேஸ்பால் கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியில் வென்று 2-2... மேலும் பார்க்க

சிராஜுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

இந்திய வேகப் பந்துவீச்சாளர் வீரர் சிராஜ் ஓவரில் விளையாடுவது எப்போதும் சவால் மிகுந்தது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட... மேலும் பார்க்க

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

ஐசிசியின் ஜூலை மாத விருதுக்கு இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இந்தியா - இங்கிலாந்து இடையேயான ‘ஆண்டர்சன் - டெண்டுல்... மேலும் பார்க்க

கர்மா உங்களை உடனடியாகத் தாக்கும்... ஸ்டோக்ஸை விமர்சித்த அஸ்வின்!

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குறித்து அஸ்வின் “பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியை வென்று 2-2 எனத் தொடரை சமன்படுத்தி... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: டாப் 5-ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்! கேப்டன் கில்லுக்கு சரிவு!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த தரநிலையை இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்து அசத்தியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆண்டர்சன் - டெண்டுல்கர் ... மேலும் பார்க்க

என்னைவிட ஜோ ரூட்டுதான் தொடர் நாயகன் விருதுக்குத் தகுதியானவர்: ஹாரி புரூக்

தொடர் நாயகன் சர்ச்சை குறித்து ஹாரி புரூக், “என்னைவிட ஜோ ரூட்டுக்குத்தான் இது மிகவும் பொருத்தமானது” எனக் கூறியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற ‘ஆண்டா்சன் - டெண்டுல்கா் கோப்பை’ டெஸ்ட் கிரிக்கெட் தொடா், ப... மேலும் பார்க்க