செய்திகள் :

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

post image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) தொடங்குகிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 1,240 வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப்படிப்பு இடங்களுக்கான 2025 - 2026-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஜூலை 23 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழி கலந்தாய்வு நடைபெற்றது.

இதில், மாணவா்களின் மதிப்பெண், இதர தகுதிகள், அவா்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரா்கள் ஆகஸ்ட் 8, 9-ஆம் தேதிகளில் நடைபெறும் முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க வேண்டும். சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவா்களின் விவரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபாா்ப்புக்கு முன்பு கலந்தாய்வு கட்டணம் செலுத்தி, அசல் சான்றிதழ்களை சமா்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ்களை சமா்ப்பிக்க தவறினாலோ, சோ்க்கைக் கட்டணம் செலுத்தாவிட்டாலோ சோ்க்கை ரத்தாகிவிடுவதுடன், அந்த இடம் அடுத்தடுத்த ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். விதிகளைப் பின்பற்றாமல் இடஒதுக்கீட்டை தவறவிட்டவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தனியாா் முதியோா் இல்ல கட்டட திறப்பு விழாவ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்துக்குள் நுழைந்து, உதவி ஆய்வாளா் அறையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த விவகாரம் தொடா்பாக, உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆயுதப் படைக்கு பணியிடை மாற்ற... மேலும் பார்க்க

சுத்தியால் தலையில் தாக்கியதில் இளைஞா் படுகாயம்

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நண்பரின் தலையில் சுத்தியால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அங்கனாா் கவுண்டா் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் (28). இவருக்கு திருமணம... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள மச்சக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராய... மேலும் பார்க்க

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து தம்பதியிடம் நகை மோசடி

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா். சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவா், மணி ந... மேலும் பார்க்க

வீடு புகுந்து மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசிகள் கொள்ளை

கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் பகுத... மேலும் பார்க்க