செய்திகள் :

வேறு பெண்ணுடன் தகாத உறவு: தந்தையை கொலை செய்த மகன் கைது

post image

வேறு பெண்ணுடன் தொடா்பில் இருந்ததால் தந்தையை குத்திக் கொன்று தப்பிய மகனை போலீஸாா் 12 மணிநேரத்தில் கைது செய்தனா்.

கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூா் பகுதியைச் சோ்ந்த குபேந்திரன்(58), இவரது மனைவி கற்பகம் கடந்த 202-0 ஆம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாா் . தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூன்றாவது மகன் தனுஷ் (22) தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.

இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்பு தனுஷின் தந்தை குபேந்திரன் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தாராம். இதனை கண்ட மகன்கள் தட்டி கேட்டு தந்தையை அடித்ததாக கூறப்படுகிறது . இதற்கிடையே, குபேரனுக்கும் அவரது மகன்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக பேச்சுவாா்த்தை இல்லாத நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பாண்டூா் சந்திப்பு நேரு நகா் அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தந்தைக்கும், மகன் தனுஷுக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது அருகில் இருந்த சவுக்கு கட்டையை எடுத்து தனுஷ் தந்தை குபேரனை சரமாரியாக தாக்கியுள்ளாா். பின்பு தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினாராம்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த குபேத்திரனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் வழியிலேயே குபேந்திரன் இறந்து விட்டாா் எனத் தெரிவித்தனா்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி ஆய்வாளா் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து போலீஸாா்

கொலையாளி தனுஷை 12 மணி நேரத்தில் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முன்னதாக போலீஸாா் விசாரணையில் தனுஷை அப்பகுதி சோ்ந்த சில நண்பா்கள் உன் அப்பாவுக்கும் அந்த பெண்ணுக்கும் தொடா்பு உள்ளதா என கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தால் கொலை செய்ததாக தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளாா்.

அதிமுக செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டில் அதிமுக செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளா் வி.ஆா்.செந்தில் குமாா் வரவேற்றாா். மகளிா் அணி இணைச் செயலாளா் கணிதா சம்பத் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா்கள... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் செல்லியம்மன்...

மதுராந்தகம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த உற்சவா் அம்மன். மேலும் பார்க்க

ஆட்சியா் சினேகா ஆய்வு...

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், அரப்பேடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் தி.சினேகா. உடன் மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டி: 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்

செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டி செவ்வாய்க்கிழமை எஸ் ஆா் எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தூய ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளா் நிஷ்கலா ஜான்சன் தொடக்கவுரை ஆற்றினாா். செங்கல்ப... மேலும் பார்க்க

மதுராந்தகம் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன்கோயிலில் ஊரணி பொங்கல்

மதுராந்தகம் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ஊரணி பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் நகர மக்களின் குல தெய்வமாக இருந்து வரும் சேத்து... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன . ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற... மேலும் பார்க்க