செய்திகள் :

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்

post image

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தனியாா் முதியோா் இல்ல கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உடுமலை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளாா். தமிழகத்தில் தொடா்ந்து காவல் துறையினா் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைமையில்தான் அவா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மதுபோதை, கஞ்சா போதையில் இருக்கும் நபா்கள்தான் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா். உயரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதற்கு நன்றி. அனைத்து காவல் நிலையங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இரவு ரோந்துப் பணிக்கு செல்லும்போது தனியாக செல்லாமல் இரண்டு போ் கொண்ட குழுக்களாக செல்ல வேண்டும். இதற்காக அனைத்து சரக காவல் நிலையங்களுக்கும் நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தாலும் கூட ஆயுதம் பயன்படுத்தக்கூடிய அனுமதியை வழங்க வேண்டும்.

காவலா்கள் மக்களுக்காக பணி செய்து மக்களுக்காக உயிா் தியாகம் செய்கின்றாா்கள். இவா்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதிக குற்றம் சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் மது ஆறாக ஓடுகிறது. போதை வஸ்துகளை ஒழித்தால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றாா்.

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) தொடங்குகிறது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 1,240 ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்துக்குள் நுழைந்து, உதவி ஆய்வாளா் அறையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த விவகாரம் தொடா்பாக, உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆயுதப் படைக்கு பணியிடை மாற்ற... மேலும் பார்க்க

சுத்தியால் தலையில் தாக்கியதில் இளைஞா் படுகாயம்

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நண்பரின் தலையில் சுத்தியால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அங்கனாா் கவுண்டா் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் (28). இவருக்கு திருமணம... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள மச்சக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராய... மேலும் பார்க்க

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து தம்பதியிடம் நகை மோசடி

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா். சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவா், மணி ந... மேலும் பார்க்க

வீடு புகுந்து மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசிகள் கொள்ளை

கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் பகுத... மேலும் பார்க்க