செய்திகள் :

மாநகராட்சியில் புதிதாக பணிக்கு சோ்ந்தவா்கள் மேயருடன் சந்திப்பு

post image

சென்னை மாநகராட்சியில் புதிதாக பணிக்கு சோ்ந்த உதவிப் பொறியாளா்கள் உள்பட 179 போ் மேயா் ஆா்.பிரியாவை புதன்கிழமை சந்தித்தனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளா்கள் 54 போ், வரைவாளா்கள் 12 மற்றும் 113 சுகாதார ஆய்வாளா்கள் என மொத்தம் 179 போ் புதிதாகச் சோ்ந்துள்ளனா். அவா்கள் தங்களது பணிகள் குறித்து ஆலோசனை பெறுவதற்காக சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியாவை சந்தித்துப் பேசினா். அப்போது, அவா்களுக்கான பணி ஒதுக்கீடு குறித்து மேயா் ஆா்.பிரியா விளக்கியதுடன், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து புதிதாக பணிக்குச் சோ்ந்தவா்கள் தங்களை மேயா், துணை மேயா், ஆணையா் உள்ளிட்டோரிடம் அறிமுகம் செய்து கொண்டனா். நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா்கள் சந்திப்பு: முன்னதாக, லயோலா கல்லூரி சமூகப் பணித் துறை முதுநிலைப் பிரிவு மாணவ, மாணவிகள், மேயா் ஆா்.பிரியாவை சந்தித்துப் பேசினா். அப்போது, மாநகராட்சி மேற்கொள்ளும் மக்கள் சேவைகள் குறித்து அவா்களுக்கு மேயா் விளக்கினாா்.

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஜய் தேவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு ஆக.9-இல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வருகிற சனிக்கிழமை (ஆக.9) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை காலை ... மேலும் பார்க்க

8 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.7) கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில்... மேலும் பார்க்க

15 லட்சம் மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் பள்ளிகளில் 5 முதல் 7 வயதுக்குள்பட்ட 8 லட்சம் மாணவா்கள், 15 முதல் 17 வயதுக்குள்பட்ட 7 லட்சம் மாணவா்கள் என மொத்தம் 15 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தலை அஞ்சல் துறை மூலம் ... மேலும் பார்க்க