செய்திகள் :

சூதாட்ட செயலி விளம்பர வழக்கு: நடிகா் விஜய் தேவரகொண்டா அமலாக்கத் துறையில் ஆஜா்

post image

சட்டவிரோத இணையவழி சூதாட்ட செயலிகள் தொடா்பான பண முறைகேடு வழக்கில், நடிகா் விஜய் தேவரகொண்டா புதன்கிழமை அமலாக்கத் துறைமுன் விசாரணைக்கு ஆஜரானாா்.

போலி நிறுவனங்கள் மூலம், சட்டவிரோத இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய செயலிகளை நடத்தி, மக்களிடம் இருந்து முறைகேடாக பணம் சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக பல்வேறு மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை புதிய வழக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

முறைகேட்டில் ஈடுபட்ட சூதாட்ட செயலிகளைப் பணம் பெற்றுக்கொண்டு, விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகைகள் லக்ஷ்மி மஞ்சு, நிதி அகா்வால் உள்ளிட்ட பிரபலங்கள் பலா் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

வழக்கு விசாரணைக்காக பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, லக்ஷ்மி மஞ்சு ஆகியோருக்கு அமலாக்கத் துறை முதல்கட்டமாக சம்மன் அனுப்பியது. தன்பேரில், பிரகாஷ் ராஜ் கடந்த ஜூலை 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி, அமலாக்கத் துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

இவரைத் தொடா்ந்து, விஜய் தேவரகொண்டா புதன்கிழமை ஆஜரானாா். அடுத்தகட்டமாக, ராணா டகுபதி ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், லக்ஷ்மி மஞ்சு ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ரசிகர்களின் அன்பை தவறாக பயன்படுத்த மாட்டேன் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் இன்றுடன் திரையுலகில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை நினைவு கூர்ந்து, அஜித்குமார் தரப்பில... மேலும் பார்க்க

பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?

கதாநாயகன், கதாநாயகி இல்லாமல் எடுக்கப்பட்ட அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ள மகாவதாரம் நரசிம்மாவின் வசூல் நிலவரத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.2025 ஆம் ஆண்டில் இந்தியா சினிமாவில் குறிப்பிடத்தக்க வகையில் ப... மேலும் பார்க்க

பிரபல நடிகைக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்: கன்னட நடிகரின் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்!

பெங்களூரில் கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர்களால் நடிகையொருவருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் இப்போது தாய்லாந்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளார். ... மேலும் பார்க்க

ஆமிர் கான் வீட்டில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சந்திப்பு! மௌனம் கலைந்தது..!

இந்தியா மட்டுமில்லாது உலகளவில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வீட்டுக்கு திங்கள்கிழமை(ஜூலை 28) 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு நிலவியது. மும்பையிலுள்ள ஆமிர் கான் ... மேலும் பார்க்க

கூலி டிரைலர் - புது அப்டேட்!

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆக. 2-ஆம் தேதி ... மேலும் பார்க்க