செய்திகள் :

பிரபல நடிகைக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்: கன்னட நடிகரின் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்!

post image

பெங்களூரில் கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர்களால் நடிகையொருவருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் இப்போது தாய்லாந்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளார்.

இந்தநிலையில், அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் நடிகை ரம்யாவுக்கு(திவ்யா ஸ்பந்தனா) மிரட்டல் விடுத்துள்ளதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நடிகர் தர்ஷனின் தலையீட்டால் அவரது ரசிகர் ரேணுகாசாமி என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டதாக வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்தநிலையில், ரேணுகாசாமி கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற விசாரணை அறிக்கைகளை மேற்கோள் காட்டி தர்ஷனுக்கு எதிராகப் பதிவிட்டிருந்தார் நடிகை ரம்யா.

இதையடுத்து, தர்ஷன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் நடிகை ரம்யாவுக்கு(திவ்யா ஸ்பந்தனா) மிரட்டல் விடுத்துள்ளதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதிலும் உச்சக்கட்டமாக, ஒரு பெண்ணை உடல் ரீதியாக கொடுமைப்படுத்தும் வக்கிர புத்தியுடன் சில ரசிகர்கள், ரம்யாவை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவோம் என்றும் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நடிகை ரம்யா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 43 சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆபாச, அருவருக்கத்தக்க, பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் எனக்கு வந்துள்ளன. நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தனக்கெதிராக கருத்து பதிவேற்றம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம்(இணைய வழி குற்றப்பிரிவு) காவல் துறையால் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடுபெறுவதாக காவல் துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் செவ்வாய்க்கிழமை(ஜூலை 29) தெரிவித்துள்ளார். துணை ஆணையர் நிலையில் பொறுப்பு வகிக்கும் அதிகாரியொருவரின் தலைமையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழில் குத்து, கிரி, வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகரத்தில் கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திரம் சிவராஜ் குமார்(சிவாண்ணா) ரம்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

A case was registered on Tuesday based on the complaint of actress Ramya aka Divya Spandana alleging online abuses and threats

ஆமிர் கான் வீட்டில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சந்திப்பு! மௌனம் கலைந்தது..!

இந்தியா மட்டுமில்லாது உலகளவில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வீட்டுக்கு திங்கள்கிழமை(ஜூலை 28) 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு நிலவியது. மும்பையிலுள்ள ஆமிர் கான் ... மேலும் பார்க்க

கூலி டிரைலர் - புது அப்டேட்!

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆக. 2-ஆம் தேதி ... மேலும் பார்க்க

உதய்பூர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: என்ன காரணம்?

உதய்பூர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2022-இல் நிகழ்ந்த கன்னையா கொலை வழக்கை மையப்படுத்தி படமாக்கப்பட்டுள்ள ‘உ... மேலும் பார்க்க

பிறந்த நாள் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன் - புகைப்படங்கள்

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிவரும் டூட் படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா பைஜூவும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார்... மேலும் பார்க்க

‘ஏஐ + இசை’ ஏ.ஆர்.ரஹ்மான் - ஆல்ட்மன் சந்திப்பின் பின்னணி!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கோலோச்சும் ‘ஓபன்ஏஐ’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மனை ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் சந்தித்து பேசினார். இந்த படங்களை அவர் இன்று(ஜ... மேலும் பார்க்க