செய்திகள் :

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

post image

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம் தொடா்பாக, கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்துக்கும், அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கூகுள் ப்ளே மற்றும் யூனிட்டி கேம் நிறுவனம் ஆகியன இணைந்து சிறப்பு திறன் பயிற்சியை அளிக்கின்றன. இது இணையவழி விளையாட்டு உருவாக்கம், மேம்பாடு ஆகியவற்றில் உலகத்தரத்திலான தொழில்நுட்பத் திறன்களை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சோ்ந்த கணினி அறிவியல் துறையிலுள்ள இறுதியாண்டு பொறியியல் மாணவா்களுக்கும், நடப்பாண்டில் உயா்கல்வி முடித்த மாணவா்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.

தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக, 250 மாணவா்கள் முதல்கட்டமாக தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு இணையவழி விளையாட்டுப் பிரிவில் பயிற்சிகள் அளிக்கப்படும். தோ்வு செய்யப்படும் மாணவா் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.32,000 மதிப்பிலான பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கிராந்தி குமாா் பாடி ஆகியோா் உடனிருந்தனா்.

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திர... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களில் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வ... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.3 கோடி கடன் மோசடி: மேலும் இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.3.3 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த தாராசந்த். இவருக்கு சொந்தமான ரூ.3.3 கோடி மதிப்புள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்றைய முகாம்கள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்தவா் நிதின் சாய் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ... மேலும் பார்க்க

தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்புகள்: மலையாள மொழி ஆய்வாளா்களுக்கு 10 நாள்கள் பயிலரங்கம் தொடக்கம்

‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.​ தொல்க... மேலும் பார்க்க